8 பேர் மட்டுமே
நடிக்கும் படத்தில் வில்லி ஆனார் இனியா. வாகை சூடவா, அம்மாவின் கைபேசி படங்களில் நடித்திருப்பவர்
இனியா. தொடர்ந்து ஹீரோயின் வேடத்தில்தான் நடிப்பேன் என்று காத்திருக்காமல் ஒரு ஊர்ல
ரெண்டு ராஜா படத்தில் ஓரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அடுத்து வில்லி வேடத்துக்கும்
தயாராகிவிட்டார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம் கரையோரம். திரில்லர் கதையாக உருவாகும்
இப்படத்தை ஜேகேஎஸ் இயக்குகிறார்.
ஜெய் ஆனந்த் ஒளிப்பதிவு
செய்கிறார். சுஜித் ஷெட்டி இசை அமைக்கிறார். இதில் இனியா வில்லியாக நடிக்கிறார். நிகிஷா
பட்டேல் ஹீரோயின். கணேஷ் பிரசாத், வஷிஷ்டா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட மொத்தம்
8 பேர் மட்டுமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
No comments:
Post a Comment