இலங்கை
பிரதமர் ஜெயரத்னா தரங்கா நேற்று திருமலையில்
ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
இலங்கை
பிரதமர்
இலங்கை
பிரதமர் ஜெயரத்னா தரங்கா. இவர் நேற்று
காலை குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார். பின்னர் திருமலைக்கு சென்று
பத்மாவதி விருந்தினர் இல்லத்தில் தங்கினார். இலங்கை பிரதமர் மற்றும்
அவரது குடும்பத்தினரை கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர்
பேட்டரி காரில் அவர்கள் ஏழுமலையான்
கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு
தேவஸ்தான முதன்மை அதிகாரி எம்.ஜி.கோபால், துணை
அதிகாரி சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி சின்னங்காரி
ரமணா ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள்
அழைத்துச் சென்றனர்.
காலை
11.15 மணியளவில் இலங்கை பிரதமர் ஜெயரத்னா
தரங்கா குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அரைமணி
நேரம் கோவிலுக்குள் இருந்த அவர் பின்னர்
ரங்கநாயகர் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
வெங்கடாசலபதி
படம்
அங்கு அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் அவருக்கு
ஆசீர்வாதம் வழங்கி லட்டு, தீர்த்த
பிரசாதங்களை வழங்கினர். கோவில் அதிகாரிகள் அவருக்கு
வெங்கடாசலபதி உருவ படத்தை வழங்கினர்.இதன்பின் 11.45 மணிக்கு வெளியே வந்த
அவர் மீண்டும் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார். அதன்பின்
திருமலையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment