வீடுகளில்
கழிப்பறை இருந்தால் தான் குஜராத் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டம்
அமலுக்கு வந்துள்ளது.
குஜராத்
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் கட்டாயம்
வாக்களிக்க வேண்டும் என்று மாநில அரசு
புதிய சட்டம் ஒன்றை கொண்டு
வந்துள்ளது. மேலும் மாவட்டம், தாலுகா,
கிராமம், பஞ்சாயத்து மற்றும் முனிசிபால் கார்பரேஷன்
உள்ளிட்டவை அடங்கிய உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிட விரும்புவோரின் வீட்டில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற
சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
குஜராத்
உள்ளாட்சி சட்ட மசோதா திருத்தப்பட்டு
திங்கட்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போது மாநில சாலைகள் மற்றும்
கட்டிட அமைச்சர் நிதின் பட்டேல் கூறுகையில்,
உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை
உள்ளது என்பதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில்
போட்டியிட முடியாது. இது தவிர ஏற்கனவே
தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் கழிப்பறை
உள்ளது என்பதற்கான சான்றிதழை 6 மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்றார்.
குஜராத்தில்
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம்
உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment