இலங்கை நீதிமன்றத்தால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட,
தமிழக மீனவர்கள், ஐந்து பேரை மீட்க, மத்திய அரசின் சார்பில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில்
தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, வாபஸ் பெறப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இலங் கை கடற்படையினரால்
கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு, அந்நாட்டு கோர்ட், தூக்கு தண்டனை
வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இந்திய
அரசின் சார்பில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, இலங் கை
அதிபர் ராஜபக்ேஷ வை தொடர்பு கொண்டு, மீனவர்கள் விடுதலை குறித்து பேசினார். இதையடுத்து,
தமிழக மீனவர்கள் ஐவருக்கும், பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுவிப்பதாக, அதிபர்
ராஜபக்ேஷ அறிவித்தார். ராமநாதபுரம் மீனவர் அமைப்பை சேர்ந்த சிலர், நேற்று, டில்லியில்,
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, மீனவர்கள் விடுதலை குறித்து முறையிட்டனர்.
இதற்கிடையே, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில், இந்திய
அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நிலுவையில் இருந்தால், மீனவர்களை
விடுதலை செய்வதில் சட்ட சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது.இதையடுத்து, மீனவர்களின் உடனடி
விடுதலைக்காக, இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நேற்று
வாபஸ் பெறப்பட்டது. நீதிபதிகள், விஜித் கே.மலல்கோடா தலை மையிலான இலங் கை சுப்ரீம் கோர்ட்
பெஞ்ச் இந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.இதை அடுத்து, மீனவர் கள் ஐவரும் விரைவில்
விடுவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment