ஒளிப்பதிவாளர்
ரவி.கே.சந்திரன் இயக்கத்தில்
வெளியான யான் வந்த சுவடே
தெரியாமல் காணாமல் போனது. இத்தனைக்கும்
ஜீவா என்ற முகம் தெரிந்த
நடிகர்தான் ஹீரோ.
இந்தியாவின்
முன்னணி ஒளிப்பதிவாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரவி.கே.சந்திரன்.
அமிதாப்பச்சன், சஞ்சய் லீலா பன்சாலி
போன்றவர்கள் ஒளிப்பதிவுக்கு முதலில் தேடும் நபர்.
சில வருடங்கள் முன்புவரை ஒளிப்பதிவுதான் என்னுடைய இடம், படமெல்லாம் இயக்க
மாட்டேன் என்றவரை எழுரை சனி
யான் படத்தில் இழுத்துவிட்டது.
எல்ரெட்
குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் படத்தை
பிரமாண்டமாக தயாரித்தது. படம் பாக்ஸ் ஆபிஸில்
பப்படமானதைத் தொடர்ந்து தயாரித்தவர்களுக்கு பல கோடி நஷ்டம்.
இந்நிலையில்
யான் படத்தின் காட்சிகள் மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து
எடுத்ததை இணையத்தில் சிலர் வீடியோ ஆதாரத்துடன்
வெளியிட்டனர். இது எல்ரெட் குமாருக்கு
பெருத்த அதிர்ச்சி. யான் சொந்தக்கதை, உண்மை
சம்பவத்தை வைத்து எழுதினேன் என்று
ரவி.கே.சந்திரன் கூறியிருக்கிறார்.
மிட்நைட்
எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்த ஹாலிவுட்
நிறுவனமோ, அந்தக் கதையை எழுதிய
எழுத்தாளரோ நஷ்டஈடு கேட்டால் நான்
என்ன செய்ய முடியும் என்று
இல்லாத குளிருக்காக ஸ்வெட்டர் தைக்க ஆரம்பித்துள்ளார் எல்ரெட்.
அதாவது, யாராது கேஸ் போட்டால்
என்னாவது என்று இவர் முந்திக்
கொண்டு ரவி.கே.சந்திரன்
மீது வழக்கு தொடுக்கப் போகிறாராம்.
காப்பிக்காக
இயக்குனரை உள்ளே தள்ளுவது என்றால்
தமிழின் பாதி இயக்குனர்கள் புழலில்தான்
இருக்க வேண்டும்.
படம் இயக்கியவகையில் எனக்கு பலகோடி ரூபாய்
நஷ்டஈடு தர வேண்டும் என்று
கௌதம் மீது வழக்கு தொடுத்தவர்தான்
எல்ரெட் குமார் என்பது உதிரி
தகவல்.
No comments:
Post a Comment