சமீபகாலமாக
வித்தியாசமான போராட்டங்களை அறிமுகப்படுத்தி, மற்ற மாநிலத்தவர்களையும் பின்
தொடர வைக்கிறார்கள் கேரளா
மாநிலத்தவர்கள்
அண்மையில்
'கிஸ் ஆஃப் லவ்' என்பதை
ஆரம்பித்து நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள். அடுத்து 'டச்
ஆஃப் லவ்' என்ற புதிய போராட்டத்தை
கொச்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
தங்களின் சொந்த
பிள்ளைகளாலும், நெருங்கிய உறவினர்களாலும் கைவிடப்பட்ட முதியவர்களை பாதுகாக்கும் வகையில், இந்த "டச் ஆஃப் லவ்"
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள்,சமூக சிந்தனையாளர்கள், அரசியல்
ஆர்வலர்கள் மற்றும் கொச்சின் கார்ப்பரேசன்
கவுன்சிலில் மெம்பர்களாக இருப்பவர்கள் என்று அனைவரும் இணைந்து
இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில் சாலையோரங்களில், முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களைச் சந்தித்து
அவர்களுக்குத் தேவையான
உடைகளை அளித்து, பாதபூஜை செய்து சால்வை
அளித்துள்ளனர். இது போலவே அனைவரும்
செய்யும் பட்சத்தில் தங்கள் சொந்தங்களுடன் இணைவர்
என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment