திண்டுக்கல்
மாவட்டம், விளாம்பட்டியில் பள்ளியிலேயே மாணவர் ஒருவரை, சகமாணவர்
ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெற்றோர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்
மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் அரசு
கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்
பள்ளியில் எத்திலோடுவைச் சேர்ந்த வினோத் குமார்
என்பவர் 11வது வகுப்பு படித்து
வந்தார். அதே வகுப்பில் விளாம்பட்டியைச்
சேர்ந்த சுந்தர பாண்டியன் என்ற
மாணவனும் படித்து வந்தான்.
இந்நிலையில்,
இன்று (12ஆம் தேதி) மதியம்
உணவு இடைவேளைக்குப் பிறகு சுந்தரபாண்டியின் நோட்டு
புத்தகத்தை வினோத்குமார் கிழித்தாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்குமிடையே கைகலப்பு
ஏற்பட்டுள்ளது. இதில், சுந்தர பாண்டி
அடித்ததில் வினோத் குமார் மயக்கமடைந்திருக்கிறார்.
இதையடுத்து, சற்று நேரத்தில் அவர்
மரணமடைந்தார்.
இதையடுத்து,
சுந்தரபாண்டியை விளாம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கிடையே
ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன்
இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment