ரஜினிகாந்த்
நடிக்கும் 'லிங்கா' படத்திற்கு
தடை விதிக்க கோரி உயர்
நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரவிரத்னம் என்பவர் தாக்கல்
செய்துள்ள மனுவில், தமது
'முல்லைவனம்-999' என்ற படத்தின் கதையை
திருடிவிட்டதாகவும், 2013-ல்
யூடியூபில் தனது கதையை பதிவேற்றி
உள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்
உருவாகி வரும் 'லிங்கா' படத்தின்
கதையும், 'முல்லை
வனம் 999' படத்தின்
கதையும் ஒன்றாக இருப்பதாக
தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே தமது கதையை பயன்படுத்தி
உள்ள 'லிங்கா' படத்துக்கு தடைவிதிக்க
வேண்டும் என்றும், குழு அமைத்து கதையின்
உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், லிங்கா படப்பாடல் வெளியூட்டுக்கும்
தடை விதிக்க வேண்டும் என்றும்
அந்த மனுவில்
அவர் கோரியுள்ளார்.
ரவிரத்தனம்
மனுவை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி வேணுகோபால்
விசாரித்தார். ரவிரத்தனம் மனுவுக்கு லிங்கா படத் தயாரிப்பாளர்
வெங்கடேஷ் மற்றும் டி.ஜி.பி. செய்தி ஒளிப்பரப்புத்
துறை செயலர், பட இயக்குநர்
கே.எஸ்.ரவிக்குமார், வசன
கர்த்தா பொன்குமாரும் பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை நவம்பர்
19-க்கு நீதிபதி வேணுகோபால் ஒத்திவைத்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த
உயர்நீதிமன்ற கிளை, ரஜினிகாந்த், இயக்குனர்
கே.எஸ்.ரவிக்குமார், படத்தின்
தயாரிப்பாளர் வெங்கடேஷ் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கு
விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment