வெளிவருவதற்கு
முன்னரே பரவலாக 'சிறந்த படம்'
என அங்கீகாரம் பெற்று விட்ட 'குற்றம்
கடிதல்' தொடர்ந்து பல விருதுகளைக் குவித்து
வருகிறது .
பிரம்மா.ஜி .என்ற அறிமுக
இயக்குநர் இயக்கத்தில் ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் சார்பில்
ஜே.சதீஷ் குமார் மற்றும்
கிரிஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி தயாரிக்கும் படம் 'குற்றம் கடிதல்'.
தொடர்ந்து
ஜிம்பாப்வே திரைப்பட விழா , மும்பை திரைப்பட
விழா, இந்தியன் பனோரமா ஆகிய திரைப்பட
விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இப்போது
பெங்களூருவில் நடைபெற உள்ள 7ஆவது
சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.
'' இந்த
சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. இந்த
தரமான படங்கள் தயாரிக்கும் பணியை
நான் இப்போது பயிற்சியாக மேற்கொண்டு
,வழக்கமாக மாற்றுவேன்'' என கூறியுள்ளார் தயாரிப்பாளர்
சதீஷ் குமார்.
No comments:
Post a Comment