4 வருடத்துக்கு
பிறகு நடிக்க வரும் சிபி
படத்தை சத்யராஜ் தயாரிக்கிறார்.கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘நாணயம்‘
படத்தில் நடித்தார் சிபி. அதன்பிறகு படங்களில்
நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
4 வருட இடைவெளிக்கு பிறகு
‘நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் நடிக்கிறார். சத்யராஜ் தயாரிக்கிறார். தரண் இசை. அருந்ததி
ஹீரோயின். இது பற்றி சிபி
கூறும்போது, ‘அடுத்து நடிக்கும் படம்
ரசிகர்களை அசத்த வேண்டும் என்பதற்காக
தினம்தினம் ஒரு கதை கேட்டேன்.
திருப்தி
இல்லை. ‘நாணயம்' படத்தை இயக்கிய
ஷக்தி சவுந்தர்ராஜன் ஒரு கதை சொன்னார்.
‘நீங்கள் ஒரு ஹீரோ. இன்னொரு
ஹீரோ நாய்‘ என்றார். வித்தியாசமான
கதைக்களத்துடன் கேட்கவே த்ரில்லாக இருந்தது.
ஹீரோவாக
நடிக்க நான் ரெடியாக இருந்தேன்.
நாயை ரெடி செய்ய பட்டபாடுதான்
அதிகம். நூற்றுக்கணக்கான நாய்களுக்கு இன்டர்வியூ வைத்தும் பிரயோஜ னம் இல்லை.
குரைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டது.
அப்போதுதான்
பெங்களூரில் மிலிட்டரிக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு
திறமையான நாய்கள் இருப்பது தெரிந்தது.
அங்கு விரைந்தோம். 100க்கும் மேற்பட்ட நாய்களை
ஒருவர் வைத்திருந்தார்.
அதில் ஒன்றை தேர்வு
செய்தோம். படப்பிடிப்பு நேரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது
என்னை பலமுறை அந்த நாய்
கடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருந்தேன். இவ்வாறு சிபி கூறினார்.
No comments:
Post a Comment