'கத்தி'
படத்தின் கதையை உதவி இயக்குநர்
கோபி சொந்தம் கொண்டாடி வரும்
விவகாரத்தில் நடிகர் விஜய் அமைதி
காக்கும் நிலையில், கோபியை கிண்டல் செய்து
இயக்குநர் முருகதாஸ் சார்பில் வீடியோ பதிவு ஒன்று
வெளியிட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (வீடியோ
இணைப்பு கீழே)
வெளியான
12 நாளில் ரூ.100 கோடி வசூல்,
ஏ.ஆர்.முருகதாஸின்
வசனங்கள், விஜய்யின் நடிப்பு என பல்வேறு
தரப்புகளும் 'கத்தி' படத்தை பாராட்டி
வந்தனர். இதற்கிடையே உதவி இயக்குநர் கோபி,
"'கத்தி' கதை என்னுடையது. இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பதற்காக அக்க்கதையை அவரிடம் கூறினேன். ஆனால்,
அக்கதையை தனது சொந்த கதை
போல இயக்கி விட்டு லாபம்
சம்பாதித்து வருகிறார்" என்று பேட்டியளித்தார்.
தொடர்ச்சியாக
பல இணையதளங்கள் கோபியின் பேச்சை வீடியோ பதிவு
செய்து வெளியிட்டு வருகிறது. இதற்கு 'கத்தி' படக்குழுவினர்
சார்பில் இதுவரை யாரும் வாய்
திறக்காமல், மவுனமே பதிலாக கூறி
வந்தார்கள். இந்த சர்ச்சை குறித்து
தற்போது பலரும் கேள்விகளை எழுப்பி
வருகிறார்கள்.
அமைதி காக்கும் விஜய்
ட்விட்டர்
தளத்தில் சனிக்கிழமை மாலை ரசிகர்களின் கேள்விக்களுக்கு
பதிலளித்தார் விஜய். அப்போது பலரும்
விஜய்யிடம் கோபியின் பேச்சு குறித்து கேள்வி
எழுப்பினார்கள். கோக் விளம்பரம், ரசிகர்களின்
சண்டைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில்
கூறிய விஜய், கோபியின் கேள்விக்கு
பதில் அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக
விஜய், கோபியின் விஷயத்தில் அமைத்தி காத்து வருவது
பலத்த சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
கிண்டல்
செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில், 'கத்தி' படக்குழு வீடியோ
பதிவு ஒன்றிணை வெளியிட்டது. அந்த
வீடியோ பதிவில் கோபியின் கேள்விகளுக்கு
முருகதாஸ் பதிலளித்து இருக்கிறார் என்று பார்த்தால், அவருடைய
அனைத்து கேள்விகளையும் கவுண்டமணி காமெடியை இணைந்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ்
சார்பில் செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி,
'கத்தி' வெளியான சமயத்தில் படத்தின்
வசூல் குறித்து பல தரப்பட்ட தகவல்கள்
வெளியாகி வந்த நிலையில், உண்மை
வசூல் இது தான் என்று
அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் தளத்தில்
அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தொடர்ச்சியாக 100 கோடி வசூலை கடந்து
விட்டது என்பது வரை அறிவித்தார்.
ட்விட்டரில்
அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தும் முருகதாஸ், ஏன் கோபியின் கேள்விகளுக்கு
பதில் கூறவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில், கோபியை கிண்டல் செய்து
'முருகதாஸ் டீம்' என்ற பெயரில்,
அதிகாரப்பூர்வ மெயில் ஐடியில் இருந்து
பத்திரிகையாளர்கள் சிலருக்கு வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.
கத்தி கதை சர்ச்சை குறித்து
கேட்பதற்காக முருகதாஸை பல முறை தொடர்பு
கொண்டபோதும் தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை.
தொடர்ச்சியாக குறுந்தகவல் அனுப்பியும் அவர் செவிசெய்க்கவில்லை.
கோபி தானாக முன்வந்து அனைத்து
கேள்விகளுக்கு பதிலளித்து வரும் நிலையில், முருகதாஸ்
பதிலளிக்காமல் இருப்பதும், கோபியை கிண்டல் செய்து
முருகதாஸ் டீம் வீடியோ வெளியிட்டிருப்பதும்
மீண்டும் சந்தேகத்தினை கிளப்பி இருக்கிறது.
'பேச முடியாது'
இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர, சினிமா
பத்திரிகையாளர்கள் சிலர் ஒன்றிணைந்து கோபி
மற்றும் முருகதாஸ் இருவரையும் அழைத்து பேச முடிவு
செய்தனர். இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் பேசிய ஜெகன், "கோர்ட்டில்
வழக்கு இருப்பதால், எனது வக்கீல் யாரிடமும்
பேசக் கூடாது" என்று பதில் கூறியிருக்கிறார்.
இவ்வாறு
பேசக் கூடாது என்று கூறும்
முருகதாஸ் தரப்பினர், கோபியை கிண்டல் செய்து
வீடியோ வெளியிட்டது, எந்த வகையில் நியாயம்
என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்,
கதைத் திருட்டு விவகாரத்தின் 'கத்தி' எதிர்ப்பாளர்கள்.
வீடியோ
குறித்து என்ன சொல்கிறார் கோபி?
இந்த வீடியோ பதிவு குறித்து
கோபியிடம் கேட்டபோது, "எனக்கு அநீதி ஏற்பட்டு
விட்டது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அவ்வாறு நீதி
கிடைக்கவில்லை என்றால், மக்கள் மன்றத்தில் நீதி
கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு கலைஞனாக நான் வழக்கு
தொடுத்து இருக்கும் சமயத்தில், அதை ஒரு கலைஞனாக
எதிர்கொள்ளாமல் இருப்பது எனக்கு கடும் மன
உளைச்சலை தருகிறது.
இவ்வாறு
மன உளைச்சலை தருபவர்கள் எப்படி கலைஞர்களாக இருக்கிறார்கள்
என்று எனக்கு புரியவில்லை. இப்படி
செய்பவர்கள் மத்தியில் எனக்கு நீதி கிடைக்கும்
என்ற நம்பிக்கை இல்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ்
தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது,
அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment