விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 11, 2015

    பா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்?

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜ வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தலைநகரமான டெல்லியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரம் காட்டியது. 

    அதே நேரத்தில் கடந்த முறை பெரும்பான்மை பலம் இல்லாமல் தவற விட்ட ஆட்சியை தற்போது எப்படியும் பிடித்து விடுவது என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மியும் களம் இறங்கியது. இம்முறை வெளிப்படையாக பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. டெல்லியில் ஏற்படும் தோல்வி பாஜவுக்கு மிகவும் கசப்பான மருந்து. அது மோடி அரசு மீதான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்று பாஜ மிகவும் கலக்கத்துடனேயே தேர்தலை எதிர்கொண்டது. 
    உடைந்தது இமேஜ்:

    வெற்றி நாயகன் என்று கடந்த மக்களவை தேர்தல் முதல் கடந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல் வரை பேசப்பட்ட அமித்ஷா தலைமையிலும், பாஜவின் அலையை நாடு முழுவதும் வீச செய்த அக்கட்சியின் நட்சத்திர தலைவர் பிரதமர் மோடியின் பிரசாரத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்தது. இதற்காக ஆம் ஆத்மியின் பக்கம் இருந்த அதிருப்தி தலைவர்கள் பாஜ பக்கம் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி மற்றும் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண் பேடி பாஜ பக்கம் சாய்ந்தனர். மேலும் இரும்பு நங்கை, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜூடன் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண் பேடி பாஜவின் முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார். கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தேர்தல் நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது பா.ஜ. கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கட்சியினரே தலைமைக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டனர்.

    மேலும் பாஜவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர். மேலும் பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர். ஆனால், ஆம் ஆத்மி எத்தகைய விமர்சனத்திற்கும் களங்காமல் தெளிவாக பாஜவின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கியபடி மக்கள் முன்பாக தன்னை காட்டியபடி முன்னேறியது. மேலும் ஆம் ஆத்மி வெளிப்படையான கோஷங்களையோ, மக்களுக்கு புரியாத கொள்கைகளையோ அறிவிக்காமல் நேரடியாக டெல்லி வாசிகளின் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்தியது. குறிப்பாக மின் கட்டண மானியம், குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத குடிசை பகுதிகள், மற்றும் காலனிகள் விவகாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் பேசியது. தலைநகரில் அரசியல் வாதிகளின் விஐபி கலாசாரத்தால் வெறுத்து போயிருந்த டெல்லி வாசிகளுக்கு ஆம் ஆத்மி வருகை மிகவும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

    அதே நேரத்தில் ஆள் பலம், படை பலம்,  பண பலம் என பிரமாண்டமாக பாஜ களம் இறங்கியது. பிரதமர் மோடி 4 இடங்களில் தனது வழக்கமான பாணியில் வளர்ச்சி மற்றும் நிலையான ஆட்சி என்று பிரசாரம் செய்தார். கெஜ்ரிவால் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், டெல்லியை ஆட்சி செய்ய அரசியலில்  போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் பேசினார். ஆனால், கடந்த 100 நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதை டெல்லிவாசிகள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்பது, விஐபி கலாசாரம், மதவாத சக்திகளை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் மீது அதிருப்தி காணப்பட்டது. 

    பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் பிரக்யா சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டவர்கள் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியது, இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மையினரை மீண்டும் மதம் மாற்றியது, தேர்தல் நேரத்தில் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவையும் பாஜவின் தோல்விக்கு வழி வகுத்தது.  மேலும் கடந்த ஆட்சியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல், பெண்கள் மீதான பலாத்காரம் உள்ளிட்டவற்றால் டெல்லி மக்கள் அவதிப்பட்ட போது, அதற்கு புதிய பாஜ அரசு எதுவும் செய்யவில்லை. இந்த உணர்வுகளை ஆம் ஆத்மி மிகவும் சாதுர்யமாக தன்வசம் ஈர்த்தது. 


    * மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தபின்னர் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு மட்டும் எங்கும் ஒலித்தது. செயல்பாடு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

    * பா.ஜ.வில் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆதரவு அமைச்சர்கள், எம்.பி.க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், செயல்பாடுகள் மதச்சார்பின்மையை அசைத்து பார்த்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார். இதுவே கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்ற கருத்தும் நிலவுகிறது. 
      
    * மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட்டோம், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசு நினைத்ததை தன்னிச்சையாக செயல்படுத்த முடியவில்லையே என்ற எண்ணத்தில் மாநிலங்களவையில் கட்சியின் பலத்தை அதிகரிக்க பா.ஜ. முயற்சி செய்தது.

    * இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி சில மாநிலங்களில் வெற்றியையும் பெற்றது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

    * சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தியும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. ஆனால், பா.ஜ.வின் போக்கில் மாற்றம் இல்லாததால் டெல்லி வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். 

    * நாட்டில் அன்றாட மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் வாய் பேச்சால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தார் மோடி. ஆனால், டெல்லியில் அவரது மோடி வித்தையை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர்.



    Posted by விழியே பேசு... at 9:28 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ▼  February (169)
      • சிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...
      • சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் ?
      • லிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன ?
      • ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...
      • ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் "லிங்க...
      • பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...
      • அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...
      • எனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...
      • முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்
      • ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...
      • என்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...
      • தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...
      • ஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...
      • எலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி?
      • இந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...
      • ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...
      • டெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி! ஒ...
      • கவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை
      • என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...
      • கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகிறது
      • அடுத்து தனுஷை இயக்கும் கௌதம்
      • என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?
      • "காஜல் அகர்வாலு"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்டன்?
      • மொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது
      • அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி?
      • செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு
      • முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்
      • பா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்?
      • அனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா ? சாதனை...
      • பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...
      • காதல் கசந்தது - நயன்தாரா
      • தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...
      • பா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...
      • பிகே தமிழ் ரீமேக்கில் கமல்?
      • சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!
      • அஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்
      • ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா
      • டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...
      • விடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...
      • என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
      • விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா
      • காதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்
      • பூர்ணாவை ஏமாற்றிய இயக்குனர்
      • ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’
      • "மோடி அலை" சந்திக்கப் போகும் முதல் அடி...!
      • வீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...
      • ஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...
      • உலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...
      • ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
      • அப்பா ஆன கேப்டன் தோனி
      • அஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா?: சிம்பு ...
      • மனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்?
      • என்னை அறிந்தால் - சாதனை வசூல்
      • அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...
      • தெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்
      • தனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்
      • ரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்!...
      • ஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...
      • துவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...
      • என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா
      • திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை
      • முதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...
      • இந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...
      • பாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்
      • ரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...
      • கேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை!
      • தொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...
      • சினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...
      • பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்...
      • இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விரக்தி
      • உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...
      • சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
      • குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...
      • ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்
      • அதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...
      • சூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்
      • பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...
      • கர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...
      • பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!
      • என்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...
      • உலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்தியா
      • ஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்
      • தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! 'அ...
      • கிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...
      • ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...
      • தேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...
      • சினிமா ஃபீல்டு கேவலமா? மனிஷா
      • இந்திக்கு போகிறார் ஷங்கர்
      • அந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் !
      • நடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா
      • ஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்!
      • அனேகமா அந்தப் படம் ஓடாது
      • பூசி மெழுகும் துளசி!
      • மீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...
      • பட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா!
      • வதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா
      • தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...
      • கொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...
      • தேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு
      • டைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.