விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, March 14, 2012

    சேனல் 4 புதிய ஆவணப்படம் அம்பலப்படுத்தும் போர்க்குற்றங்கள்..!


    "சிரியாவில் போர்க்குற்றம் நடந்தால் உடனே குரல் கொடுக்கிறோம். ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனப்படு்கொலைகளை பற்றி வாய்திறக்க மறுக்கிறோம்.

    இந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, ஒரு பத்திரிகையாளனாய் இந்த அநியாயங்களுக்கு நியாயம் தேடி தருவேன்," என்று கூறுபவர், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்னோ.

    இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகுக்கு உணர்த்த கிடைத்த வலுவான ஆயுதம், 'சேனல் -4'  வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப் படம்.

    இந்த ஆவணப் படம், இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே போன்ற பல நாடுகளின் நாடாளுமன்றங்களில் திரையிடப்பட்டு, இலங்கைக்கு எதிரான பல விவாதங்களும் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து, இப்போது மீண்டும் சேனல்-4 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்ற ஆவணப்படத்தை இரண்டாவது பாகமாக வெளியிடவுள்ளது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு சேனல் 4-ல் இந்தப் படம் ஒளிபரப்படுகிறது.

    இந்த வெளியீட்டுக்கு முன்னர் கடந்த மார்ச் 11-ம் தேதி, ஜெனீவா மனித உரிமை திரைப்பிட விழாவில் இப்படம் திரையிடப்பட்டப்போது, 'இதைப் பார்ப்பதற்கே கல்லாக்கி கொண்ட மனம் வேண்டும்' என்று மனித உரிமை  ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

    சேனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் அம்பலமாகும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் என்னென்ன?

    ஜெனீவாவில் இப்படத்தைப் பார்த்து அதிர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் விவரித்தவை:

    சிறுவன் பாலச்சந்திரன் திட்டமிட்டு படுகொலை!

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் 'பாலச்சந்திர பிரபாகரன்', பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன.  அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று சேனல் 4 குறிப்பிட்டுள்ளது.

    பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் 2 முதல் 3 அடி தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும்  'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது.


    இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.     

    திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்!

    'எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே 'திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது சேனல் 4.

    உணவின்றி மருந்தின்றி உயிர்கள் பலி!
    பாதுக்காப்பு வலயங்கள் (No Fire Zone) பகுதியில் அடைக்கப்பட்ட தமிழர்கள் உணவின்றி, குண்டுவீச்சுத் தாக்குதலில் சிதறுண்ட உடல் பாகங்களுக்கு மருந்து இல்லாமல் பலர்  வலியாலும், பசியாலும் இறந்துள்ளனர்.


    இலங்கை அரசின் கணக்கின்படி 60,000 தமிழர்கள் பாதுக்காப்பு வலயங்களில் இருந்துள்ளனர். ஐ.நா.வின் கணக்குப்படி 1,20,000 தமிழர்கள் இருந்துள்ளனர். இப்பொழுது எங்கே அந்த மக்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளது இந்த ஆவணப்படம். 

    பதுங்கு குழிகள் மீது பாய்ந்த குண்டுகள்!

    பாதுகாப்பு வலயங்களில் இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.  இத்தாக்குதல் நடக்கும்போது  பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

    இப்படி, தாங்கள் பார்த்த ஆவணப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் விவரிக்க, இப்படத்தை இயக்கிய கல்லம் மெக்ரே என்ன சொல்கிறார்?

    கண்டுகொள்ளாத ஐ.நா., மேற்குலக நாடுகள்...

    இலங்கையில் பொதுமக்களின் படுகொலைகளுக்கு ஐ.நா.வும் மேற்குலகின் நடவடிக்கை இன்மையுமே முக்கிய காரணம் என்று 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மெக்ரே குற்றம்சாட்டுகிறார்.

    தனது ஆவணப் படங்கள் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றியும் அவர் விரிவாக அளித்துள்ள பேட்டியில், "இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள். 'இலங்கை ராணுவம் ஒழுக்கமானது; ஒருங்கிணைக்கப்பட்டது; போரை நானே வழிநடத்தினேன்,' என்னும் மகிந்த ராஜபக்ஷே தொடங்கி, கோத்தபாய ராஜபக்ஷே, சரத் பொன்சேகா உத்தரவுகளின்படியே இந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

    இம்மக்களுக்கு சர்வதேச சமூகம் தவறு செய்தது, உண்மை ஆதாரங்கள் உடையவை. ஐ.நா. பதுங்கு குழிகள் என அனைத்து பாதுக்காப்பு வலயங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டுமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், போராளிகள் கொல்லப்படவேண்டும் என்றே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த வீடியோக்கள் எதுவுமே பொய்யானது அல்ல. இது இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் நடத்திய உலகளாவிய போரை காரணமாக வைத்துக்கொண்டு ராஜபக்ஷே அரசு, அப்பாவி மக்களையும், விடுதலைப்புலிகளையும் படுகொலை செய்துள்ளது. இது திட்டமிட்ட இனப்படுகொலை," என்று அவர் தனது ஆவேசத்தை பதித்துள்ளார்.

    இந்த ஆவணப் படங்களில் உள்ள காட்சிகள் உண்மை தான் என்பதை, மூத்த தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் ஆராய்ந்து உறுதி செய்துள்ளார்.

    விழிக்குமா சர்வதேச் சமூகம்?

    ஆவணப்படத்தின் இராண்டாவது பாகத்தை கண்ட ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அதிர்ச்சியுற்று கூறுகையில், "யுத்தம் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற தயாராகயில்லை.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித முக்கிய செயற்பாடுகளை இலங்கை அரசு செய்யாத  நிலையில், குற்றச்சாட்டுக்கள் குறித்தான ஒரு சுதந்திரமானதும் நம்பகமானதுமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் பொறுப்பும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.

    இலங்கைப் போரின் இறுதியில் இடம்பெற்ற கொடுமையான மனித உரிமை மீறல்கள்  சம்பவங்களுக்கான நீதியே கிடைக்காதவரை, இலங்கை அரசு கூறுகின்ற இன நல்லிணக்கம், சமாதானம் என்பது எல்லாம் தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று," என்கிறார் அவர்.

    "புத்தனைப் போதிக்கும் தேசம் செய்தது... காந்தியம் போற்றும் தேசம் ரசித்தது என்பதை போல் தானே நடந்தது," என்று இயலாமையிலும் கருத்தைப் பதிவு செய்கின்றனர், எஞ்சிய ஈழத் தமிழர்கள்.

    இது பொய்யோ வதந்திதோ அல்ல... ராஜபக்சஷேவும், கோத்தபயவும் கூறிய 'இந்தியாவின் வழி நடத்தலின்படியே போரை நடத்தி வென்றோம்' என்ற கூற்றும் இங்கே நினைவுகூரத்தக்கது.

    "இவ்வரலாற்றில் தமிழர்களுக்கு தமிழர்களே செய்து கொண்ட பாவம் - கண்டும் காணாமல் தானுண்டு; தன் வேலை உண்டு; தமிழர் பூமி அல்ல - ஈழம் அது அண்டை நாடு' என்று சாவகாசமாக விவாதித்து கொண்டு இருந்தது தான்," என்று கூறப்படும் குறைகளுக்கு பதில் தான் என்ன?

    விலங்கு மனிதர்கள் பிடியில், பொம்மை மனிதர்களாய் உதைபட்டு மரணித்துப் போன ஈழத்தமிழர்களுக்கு 'மனித உரிமை' பேசும் சர்வதேசச் சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது?


    Posted by விழியே பேசு... at 8:17 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousMarch 16, 2012 at 8:13 PM

      devedia paiya raja baksay

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.