இலங்கை
அதிபர் மகிந்த ராஜபக்சே 2005 மற்றும்
2010 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சி
பொறுப்பேற்றார். 2 வது முறையாக அதிபராக
பொறுப்பேற்ற அவர் 4 ஆண்டுகளை முடித்துள்ளார்.
இலங்கையில் முன்பு ஒருவர் 2 முறை
தான் அதிபர் தேர்தலில் போட்டியிட
முடியும் என்ற விதி இருந்தது.
ஆனால்
2010&ம் ஆண்டு 2 முறை மட்டுமே
போட்டி என்ற வரையறையை நீக்கி
சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 3&வது
முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட
முடிவு செய்த ராஜபக்சே, இதற்காக
சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் மனு
தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மூத்த மந்திரி நிமல்
சிறிபால டிசில்வா, ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில்
3&வது முறையாக போட்டியிடுவதில் எந்த
தவறும் இல்லை என்று சுப்ரீம்
கோர்ட்டு விளக்கமளித்துள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதே போல மற்றொரு மந்திரியான
பஷீர் சேக்தாவூத் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு அதிபர் தேர்தலில் மகிந்த
ராஜபக்சே 3&வது முறையும் போட்டியிடலாம்
என்று அறிவித்துள்ள முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 6 ஆண்டுகளுக்கான ஆட்சியிலே இடம்பெறக் கூடிய சமூக பொருளாதார
வளர்ச்சியில் தங்களையும் சேர்த்து அபிவிருத்தி செய்கின்ற தலைவரை தேர்ந்தெடுக்கின்ற ஒரு
வாய்ப்பை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னாள்
தலைமை நீதிபதி சரத் சில்வா
பின்னணியில் இயங்கிவரும் எதிர்க்கட்சிகள், ராஜபக்சே ஏற்கனவே 2 முறை தேர்வு பெற்ற
பின்னரும் 3&வது முறையாக தேர்தலில்
போட்டியிட இருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளன.
No comments:
Post a Comment