திருப்பூர்.
பூஜை படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஊர் ஊராகச்
செல்லும் விஷால், திருப்பூர் வருகிறார்.
காரில் செல்கிறவரின் கவனத்தை சீடி கடையொன்றின்
முன்னால் ஒட்டப்பட்டிருக்கும் கத்தி, பூஜை படங்களின்
போஸ்டர்கள் ஈர்க்கின்றன. சீடி கடைக்கு முன்னால்
எதுக்கு புதுப்பட போஸ்டர்கள்...?
உதவியாளரை
அனுப்பி விசாரித்தால் அந்தக் கடையில் கத்தி,
பூஜை இரு படங்களின் சீடிகள்
கன ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
கத்திக்கும், பூஜைக்கும் தியேட்டர்வரை போக வேண்டியதில்லை, இங்கே
வந்தால் ஐம்பது ரூபாயில் அட்டகாசமான
சீடியே கிடைக்கும் என்று பொதுஜனத்துக்கு தெரியப்படுத்ததான்
அந்த போஸ்டர்கள். கடைக்கு உள்ளேயும் போஸ்டரை
ஒட்டியிருக்கிறார்கள்.
பணம் போட்டு படம் எடுத்த
விஷால் அடுத்து என்ன செய்திருப்பார்...?
ஆள் அம்புடன் கடைக்குள் அதிரடியாக பிரவேசித்தவர் பூஜை எவ்வளவு சீடி
வச்சிருக்க, கத்தி எவ்வளவு இருக்கு
என்று நேரடியாகவே அனைத்தையும் கைப்பற்றினார். போலீஸுக்கு தகவல் பறக்க, உடனடியாக
கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
விஷால்
இப்படி நேரடியாக களத்தில் இறங்கி திருட்டு டிவிடிகளை
கைப்பற்றுவது முதல்முறையல்ல. காரைக்குடிக்கு ஷுட்டிங் போயிருந்த போது அவரது புதிய
படத்தை லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினர்.
அந்த கேபிள் கடை எங்கிருக்கிறது
என்று இரவே தேடிப்பிடித்து அங்கு
படத்தைப் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இருவரை போலீஸில் பிடித்துத்
தந்தார். அதேபோல் திருட்டு டிவிடி
விற்றவர்களையும் உள்ளே தள்ள உதவி
செய்தார்.
No comments:
Post a Comment