நடிகை த்ரிஷா, சினிமா தயாரிப்பாளரை
திருமணம் செய்கிறார். அடுத்த ஆண்டு மார்ச்
மாதம் இவர்கள் திருமணம் நடக்கிறது.
தமிழில், ‘லேசா லேசா’ என்ற
படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்
த்ரிஷா. தொடர்ந்து, சாமி, கில்லி, திருப்பாச்சி,
ஆறு, கிரீடம், பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா,
மங்காத்தா உட்பட ஏராளமான படங்களில்
நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, ‘அப்பா
டக்கர்’, ‘பூலோகம்‘, மற்றும் தனுஷ் ஜோடியாக
பெயரிடப்படாத ஒரு படம் என
நடித்துவருகிறார். இவரும் தெலுங்கு நடிகர்
ராணாவும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக
ஜோடி சேர்ந்து வந்துகொண்டிருந்தனர். திடீரென்று கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள்
தெரிவித்தனர்.
இந்நிலையில்
த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் சென்னையில் ரகசிய நிச்சயதார்த்தம் நேற்று
முன்தினம் நடந்துள்ளது. சென்னை செனடாப் சாலையில்
உள்ள த்ரிஷாவின் வீட்டில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இவர்கள்
திருமணம் அடுத்த ஆண்டு மார்ச்
முதல் வாரம் அல்லது 15ம்
தேதி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
வருண்மணியன் பாலாஜி மோகன் இயக்கிய
‘வாயை மூடிப் பேசவும்‘ என்ற
படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் ஒய் நாட்
ஸ்டூடியோஸ் சஷிகாந்துடன் இணைந்து ‘காவியத் தலைவன்’ படத்தை
தயாரித்துள்ளார். சிம்பு நடிக்கும் படத்தையும்
தயாரிக்க உள்ளார். மேலும் கட்டுமான நிறுவனமும்
நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment