தமிழ்,
ஆங்கிலம் உள்ளிட்ட மொழியில் மகாபாரதம் கதை படமாக உள்ளது.
அமிதாப், மோகன்லால், விக்ரம் நடிக்க பேச்சு
நடக்கிறது. தமிழ், தெலுங்கில் ராஜ்
மவுலி இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் ‘பாஹுபாலி'
படம் பலகோடி ரூபாய் செலவில்
தயாராகி வருகிறது.
இப்படம்
தமிழில் ‘மகாபலி' என்ற பெயரில்
வெளிவர உள்ளது. இந்த பொருள்
செலவை மிஞ்சும் வகையில் மலையாளம், தமிழ்,
தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் ‘மகாபாரதம்'
படமாக உள்ளது.
இதுபற்றி
மல்லுவுட் திரையுலகினர் கூறும்போது, ‘மகாபாரதம் படம் கறுப்பு வெள்ளை
காலம் முதல் கலர் படங்கள்
வரை எடுக்கப்பட்டாலும் தற்போது உருவாக உள்ள
படம் மகாபாரதத்தில் வரும் பீமன் கதாபாத்திரத்தை
பிரதானமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது.
இதில் பீமனாக நடிக்க மோகன்லாலிடம்
பேச்சுவார்த்தை நடக்கிறது. பீஷ்மராக அமிதாப்பச்சன், அர்ஜுனனாக கோலிவுட் ஸ்டார் விக்ரம், திருதராஷ்டிரனாக
நாகார்ஜுன், திரவுபதியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவும் பேசப்பட்டு வருகிறது.
மலையாள
திரைக்கதாசிரியர் எம்.டி.வாசுதேவன்
நாயர் திரைக்கதை அமைக்க உள்ளார். ஸ்ரீகுமார்
இயக்குனர் பொறுப்பை ஏற்க உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை
அமைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. கேரளாவில் உள்ள இரண்டு பெரும்
நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை ரூ.250
கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment