லிங்கா
படத்தில் ரஜினி - சோனாக்ஷி சின்ஹா
பாடும் காதல் பாடல் வரிகள்
வெளியாகியுள்ளன.
ஏ ஆர் ரஹ்மான் இசையில்
வைரமுத்து எழுதியுள்ள அந்தப் பாடல் என்
மன்னவா மன்னவா என்று தொடங்குகிறது.
என்னைவிட
அழகி உண்டு - ஆனால் உன்னைவிட
உன்னைவிடத் தலைவன் இல்லை என
அடுத்த வரி வருகிறது.
பாடல் முழுமையாக...
பெண்: என் மன்னவா! மன்னவா!
என்னைவிட
அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட
உன்னைவிடத்
தலைவன்
இல்லை - ஆமாம்
உன்னைவிட
உன்னைவிடத்
தலைவன்
இல்லை.
பெண்: சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலவை
வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன்
கைகளோ
வேர் தேடுதே
பெண்: நூறு யானைகளின்
தந்தம்கொண்டு
- ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு
அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண்: தென்னாட்டுப் பூவே
தேனாழித்
தீவே
பாலன்னம்
நீ - நான்
பசிக்காரன்
வா வா
மோகக் குடமே
முத்து
வடமே
உந்தன்
கச்சை மாங்கனி
பந்தி வை ராணி
ஆண்: வெய்யில் பாராத
வெள்ளைப்
பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் - உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண்: சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக்
கூடல்கொள்ள வா
கொற்றவை
மைந்தா....
No comments:
Post a Comment