விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, December 31, 2010

    2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு


    ஆண்டு தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்சிகளை பற்றி நேற்றைய முதலாம் பாகத்தில் போட்டு இருந்தேன் அதன் தொடர்ச்சியாக இந்த இறுதி பாகத்தை படிக்கவும் நேற்றைய பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கவும் ...


    ஜூலை
    13 - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த கோவை கண்டனக் கூட்டம் இன்று நடந்தது. ஜெயலலிதா கலந்து கொண்ட இக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தால் கோவையே திணறியது.

    14 -
    பல மாநிலங்களில் மோசடியாக ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்த ஜேபிஜே குழுமத் தலைவர் தேவதாஸ் கைது செய்யப்பட்டார்.

    17 -
    இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், எச்சரித்தும் சென்னைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் தலைவர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    21 -
    சென்னையில் ஆதித்யா என்ற சிறுவன் அவனது தந்தை ஜெயக்குமாரின் கள்ளக்காதலியான பூவரசியால் கடத்திக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டனம் பஸ் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயல் தமிழகத்தை அதிர வைத்தது.

    24 -
    மதுரையைச் சேர்ந்த பாத்திமா என்பவரின் ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப்பைக் கடத்தி நரபலி கொடுத்து ரத்தத்தைக் குடித்ததாக அப்துல் கபூர் மற்றும் அவரது மனைவி ரமலா பீவி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

    27 -
    திரைப்படத் தயாரிப்பாளரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கியதாக திரைப்படத் தணிக்கை அதிகாரி ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

    -
    புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

    28 -
    ஐடிஐ வினாத்தாள் வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    -
    ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

    30 -
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார்.

    -
    தமிழகத்திலும், புதுவையிலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை மதிமுக இழந்தது. புதுவையில் மாநிலக் கட்சி அந்தஸ்தை பாமக இழந்தது.

    -
    ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து எஸ்.ஆர்.ராஜாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    31 -
    சென்னைக் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    ஆகஸ்ட்

    13 -
    சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    20-
    தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது.

    30-
    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    செப்டம்பர்

    2-
    ஜாதி குறித்து தவறான தகவலைக் கொடுத்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது.

    10 -
    தமிழக அரசின் சமச்சீர் க்ல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    12 -
    தமிழகத்தில் 15 ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம் என அரசு அறிவித்தது.

    -
    பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா சென்னையில் மரணமடைந்தார்.

    -
    தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    14 -
    நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டண நிர்ணயத்தை நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    -
    அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 13 கைதகிளை விடுதலை செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

    -
    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    -
    இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது, பதிவு மூப்பை புதுப்பிப்பது ஆகியவற்றை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    -
    சென்னையில் ரூ. 165 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

    19 -
    சென்னையில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில், பிரேசிலை 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

    22 -
    தஞ்சாவூர் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் கோலாகலமாக தொடங்கியது. 

    28 -
    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது.

    -
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அக்டோபர்

    7 -
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

    8 -
    டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. புதிய டிஜிபியை தேர்வு செய்யவும் அது உத்தரவிட்டது.

    9 -
    முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்தவருமான திருநாவுக்கரசர் சோனியா காந்தி முன்னிலையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸில் முறைப்படி இணைந்தார்.

    18-
    தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது.

    -
    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில், கள்ளக்காதல் விவகாரத்தில், போலீஸ்காரர் இசக்கிமுத்து என்பவர் தனது காதலி உமா மகேஸ்வரி, நண்பரின் மனைவியான கீதா ஆகியோரை வெட்டிக் கொன்று தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    19 -
    சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவிசங்கர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு கொள்ளையராக மாறிய கதை தெரிய வந்து தமிழகமே அதிர்ந்தது.

    21 -
    பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்யண விவரத்தை தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

    22 -
    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    23 -
    தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் விலகினார்.

    26 -
    காங்கிரஸுக்குப் போவது போல போக்குக் காட்டிய நடிகர் ராதாரவி திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

    -
    பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கி தடா கோர்ட் உத்தரவிட்டது.

    நவம்பர்

    1 -
    தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    3 -
    சென்னையை உலுக்கியது கீர்த்திவாசன் கடத்தல் நாடகம். இரண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர்களால் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் பெரும் பரபரப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாளே கடத்தல்காரர்களான விஜய், பிரபு ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

    6 -
    தமிழகத்தை உலுக்கிய ஜல் புயலால் பெரும் மழை பெய்து சென்னை உள்பட தமிழகமே வெள்ளக்காடாகியது.

    9 -
    கோவையில் முஷ்கின் (11) என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும் கடத்திச் சென்று முஷ்கினை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தும், இருவரையும் தண்ணீரில் தள்ளிக் கொன்ற மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரு கொடூரர்களில், மோகன கிருஷ்ணன், கோவை அருகே என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.

    11 -
    திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று கூறி புதிய 'பிட்'டைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

    12 -
    தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    14 -2
    ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    22 -
    தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் தமிழகமே ஸ்தம்பித்தது. 100 பேர் பலியானார்கள்.

    23 -
    நடிகர் விஜயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியதாக கூறி அவரது மகள் வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

    25 -
    தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    -
    குன்னூர் அருகே மத்திய அரசின் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள்.

    29 -
    தஞ்சை பெரிய கோவிலின் ராஜராஜன் வாயில் கோபுரத்தில் இடி தாக்கி கலசம் உடைந்தது.

    டிசம்பர்

    1 - முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரத்தை வெளியிட்டார். அதில் கோபாலாபுரம் வீட்டைத் தவிர தனக்கு வேறு சொத்து இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

    2 -
    நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மண் அள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அதிரடி தடை விதித்தது.

    4-
    கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. முற்றுகைப் போராட்டத்தால் திரும்பிச் சென்றார்.

    8 -
    முன்னாள் அமைச்சர் ராசா, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

    14 -
    ஒரு ஜாமீன் வழக்கு தொடர்பாக முன்னாள் நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதிக்க முயன்றவர் முன்னாள் அமைச்சர் ராசா என்ற தகவலை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் சர்ச்சையில் மாட்டினார்.

    15 -
    ராசாவின் வீடுகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் மீண்டும் சிபிஐ சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

    -
    ஹஜ் யாத்திரை போல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

    -
    எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்தார்.

    -
    பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வரும்போது அவரைத் தாக்கி படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. அதேபோல முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனராம் புலிகள் என்றும் உளவுத்துறை கூறியது.

    16 -
    அரசியல்வாதிகளுடன் எங்களுக்குத் தொடர்புகள் இருப்பதால் எங்களை நியாயமே இல்லாமல் குறி வைத்துள்ளனர் என்று காட்டமாக கூறினார் சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்பின் தலைவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.

    -
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

    17 -
    தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்தில் அரசு மருத்துவமனை கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    -
    அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது 'உடன் பிறவா சகோதரி' சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்தார்.

    24 -
    ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியது. இது 9 மணி நேரம் நீடித்தது.

    25 -
    மீண்டும் ராசாவிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடந்தது.

    26 -
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    27 -
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணனுக்கு வந்த 3 மிரட்டல் கடிதங்களில்ல மணிப் பாதிரியார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இக்கோவில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    28 -
    ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

    29 -
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த காமச் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்ததால் அவர் தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    -
    அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

    - 500
    க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

    -
    சென்னை மாநகராட்சியைச் சுற்றி தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக 3 மாநகராட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

    30 -
    தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஆலோசனை நடத்தினார்.



    Posted by விழியே பேசு... at 8:10 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.