பீகார் மாநிலத்தில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவருக்கும் புதன்கிழமை கம்ப்யூட்டர், டேப்ளட்களை இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தன் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் அவசியம் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருந்தார். இதன்படி புதன்கிழமை இதற்கான பயிற்சி முகாம் காலை தொடங்கி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி இதுகுறித்துத் தெரிவிக்கையில், மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தகவல் தொழில்நுட்பத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது அரசு இயந்திரம் விரைவாக இயங்க கம்ப்யூட்டர் அறிவினைப் பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் நம் மாநிலம் வளர்ச்சிப் பாதையை எட்டுவது கடினம் என்று கூறினார்.
No comments:
Post a Comment