’நடிகன் - ரசிகன்
என்பதையும் தாண்டிய உறவு இது’ , ‘ஒரே இரவில் தங்களது பலத்தை சிம்பு ரசிகர்கள்
காட்டிவிட்டார்கள்’
என பொது ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு என்ன செய்தார்கள் சிம்பு ரசிகர்கள்.
சிம்பு - ஹன்ஸிகா
நடித்துள்ள வாலு திரைப்படம் டிசம்பர் 26-ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது தான்
தாமதம். இரண்டு வருடங்களாக சிம்புவை திரையில் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்தில்
இருந்த ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள் என்றுகூட சொல்லலாம்.
#VaaluDec26 என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி ஒரே இரவில்
சிம்புவை உலக அளவில் டிரெண்டாக செட் செய்துவிட்டார்கள். ரசிகர்களின் இந்த ஆதரவைக் கண்டு
மனம் நெகிழ்ந்த சிம்பு ட்விட்டரில் “ டைம்லைன் முழுக்க உங்களது பதிவுகள் தான். உங்களது
இந்த ஆதரவுக்கு நன்றி. உங்களது ட்வீட்களை படித்துக்கொண்டிருக்கிறேன். கண் கலங்க வெச்சிட்டீங்க.
அனைவருக்கும் நன்றி. நடு இரவில் வாலு படத்திற்காக டப்பிங் செய்துகொண்டிருக்கிறேன்.
நீங்கள் சிரிப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட இரு வருடங்களுக்குப்
பிறகு நான் திரையில் தோன்றாததை நினைத்து வருந்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் .....
No comments:
Post a Comment