ஜெயலலிதாவுக்கு
எதிரான கருத்தை நடிகர் ரஜினிகாந்த்
மீண்டும் சொல்ல முன் வர
வேண்டும் என்று பாமக நிறுவனர்
ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில்
நடந்த பா.ம.க.
மாநில தலைமை பொதுக்குழு கூட்டத்தில்
சிறப்புரை ஆற்றிய ராமதாஸ், தமிழகத்தில்
14 சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
சற்று அரசியலை பின்நோக்கி பார்த்தால்
1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம்
ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி
நடைபெற்றது. 1967ஆம் ஆண்டு காங்கிரஸ்
கட்சிக்கு எதிராக வீசிய அலையை,
1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க. சரியாக
பயன்படுத்திக் கொண்டது.
தற்போது
அதே நிலை தான் அ.தி.மு.க.
அரசுக்கு எதிராக உள்ளது. இதை
நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். 1996ஆம் ஆண்டு சட்டமன்ற
தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயலலிதா
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று சொன்னார். தற்போது
அந்த கருத்தை நடிகர் ரஜினிகாந்த்
மீண்டும் சொல்ல முன் வர
வேண்டும்.
No comments:
Post a Comment