தூக்கு
தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக
மீனவர்களையும் பிரதமர் மோடி சந்திக்காதது
ஏன்? என்பதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
சென்னை
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர்
நரேந்திர மோடியின் முயற்சியால் 5 மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து
பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேபோல்
தமிழக மீனவர்களின் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்.
மேலும் சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும்
படகுகளை மீட்க மோடி நடவடிக்கை
எடுத்து வருகிறார். விரைவில் தீர்வு ஏற்படும். 5 மீனவர்களிடம்
தனியாக பேசினேன். இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தி
துன்புறுத்தவில்லை என அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விக்கு
அளித்த பதில்:
தமிழக அரசு ரூ.3 லட்சம்
நிவாரணம் வழங்கியுள்ளதே, நீங்கள் என்ன செய்தீர்கள்?
மத்திய
அரசு அவர்களது குடும்பத்துக்கு வாழ்வையே அளித்துள்ளது.
டெல்லியில்
மோடியும், வெளியுறவு துறை அமைச்சரும் மீனவர்களை
சந்திக்காதது ஏன்?
சில நேரங்களில் சில காரணங்களால் சிலரை
சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.
அது என்னவென்று இங்கு சொல்வது நன்றாக
இருக்காது. உங்களின் பலருக்கு அது தெரிந்திருக்கலாம். இவ்வாறு
அவர் கூறினார்.
No comments:
Post a Comment