விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, January 5, 2011

    ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்திய கமலுக்கு கவிஞர் அறிவுமதி கண்டனம்



    மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும்,தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது-
    "என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்" என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு
    30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு
    இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
    கமல் படம்.
    மன்மதன் அம்பு.
    மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
    வந்து விட்டோ‌மோ‌
    என்கிற அளவிற்கு
    ஒரே கமலஹாஸன் களும்!
    கமல ஹாஸிகளும்!
    அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
    பதுங்கிக் கொண்டு
    நூல்தனம் காட்டும் அவரை
    பரமக்குடி பையன் என்றும்
    பெரியாரின் பிள்ளை என்றும்
    பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
    இந்த
    அம்பு
    இராம பக்தர்களின் கைகளிலிருந்து
    இராவண திசை நோக்கி
    குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
    என்பதை
    உணர்ந்து திருந்துதல் நல்லது.
    கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
    பெரும்பகுதித் தமிழர்களுக்கு
    அறிமுகமானவர்,
    நவராத்திரித் தமிழனை
    தசாவதாரத்தால்
    முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
    இந்த மன்மத அம்புவின்
    வாயிலாக
    தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
    தாய்த் தமிழை
    இழிவு செய்வதில்
    உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
    புகழ் சுஜாதா ஆகியோரைத்
    தாண்ட முயற்சி
    செய்திருக்கிறார்.
    "தமிழ் சாகுமாம்
    தமிழ் தெருப் பொறுக்குமாம்.
    வீடிழந்து, நாடிழந்து,
    அக்காள் தங்கைகளின்
    வாழ்விழந்துஞ்
    ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்
    கொத்துக் கொத்தாய்
    தம்
    சொந்தங்களை
    மொத்தமாய்ப் பலியெடுத்த
    கொடுமைகளுக்கு
    இன்னும் அழுதே முடிக்காத
    அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
    இடத்திற்கே போய்..
    பனையேறி விழுந்தவரை
    மாடு
    மிதித்ததைப் போலஞ்
    வாடகை வண்டி ஓட்டுகிறவராக
    ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
    பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
    கதா பாத்திரமாக்கி..
    ஒரு செருப்பாக அன்று..
    இரு செருப்பாகவும்
    என்று
    கெஞ்ச வைத்து..
    இறுதியில்
    அந்த எங்கள்
    ஈழத் தமிழரை
    செருப்பால் அடிக்கவும்
    ஆசைப்பட்டு ஏதோவோர்
    ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
    முயன்றிருக்கிறீர்களே
    கமல்!
    அது என்ன ஆத்திரம்!
    போர்க்குற்றவாளியாகிய அந்தக்
    கயவனின் தானோடு ஆடுகிற
    சதைதானா உங்களுடையதும்! ஆம்..
    சதைதானே உங்களுடையதும்!
    அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
    அங்குள்ள கோயில்களில்
    கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
    தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
    உங்களவர்களை அர்ச்சகர்களாக
    அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
    தங்கள் பிள்ளைகளுக்கான
    பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
    அரங்கேற்றத்திற்காகவும்
    இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
    கொடுத்து அழைத்து, வரவேற்று,
    சுற்றிக் காட்டி, கண்கலங்க
    வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
    இந்தப் படம் எடுக்கப்போன
    இடங்களில் கூடஞ் நீங்கள்
    பெரிய்ய நடிகர் என்பதற்காக
    உங்களுக்காக
    தங்கள் நேரத்தை வீணாக்கி
    தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
    எவ்வளவோ உதவியிருப்பார்களே!
    அத்தகைய பண்பாடு மிக்க
    எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
    நீங்கள் காட்டுகிற
    நன்றி இதுதானா கமல்!
    செருப்புதானா கமல்! 
    ஈழத் தமிழ் என்றால்
    எங்களுக் கெல்லாம்
    கண்ணீர்த்
    தமிழ்!
    குருதித்
    தமிழ்!
    இசைப்பிரியா என்கிற
    ஊடகத் தமிழ்த்தங்கை
    உச்சரித்த
    வலிசுமந்த
    தமிழ்!
    ஆனால்.. உங்களுக்கு மட்டும்
    எப்படி கமல்
    அது
    எப்போதும்
    நகைச் சுவைத்
    தமிழாக மட்டுமே
    மாறிவிடுகிறது!
    பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
    தாங்கள் நடித்த
    படத்திற்குக் கோடிகோடியாய்
    குவிக்க.. தமிழனின் பணம்
    வேண்டும்.
    ஆனால்
    "அவன் தமிழ்
    சாக வேவண்டும்
    அவன் தமிழ்
    தெருப் பொறுக்க
    வேண்டும்."
    தெருப் பொறுக்குதல்
    கேவலமன்று.. கமல்.
    அது
    தெருவைத் தூய்மை
    செய்தல்!
    தோட்டி என்பவர்
    தூய்மையின் தாய்..
    தெருவை மட்டும் தூய்மை
    செய்தவர்கள் இல்லை..
    நாங்கள்
    உலகையே
    தூய்மை செய்தவர்கள்..
    "யாதும் ஊரே யாவரும்‘
    கேளிர்' என்று
    உலகையே பெருக்கியவர்கள்
    உங்கள்.
    எங்களைப் பார்த்து
    செருப்பைத் தூக்கிக்
    காட்டிய
    கமல் அவர்களே..
    உங்களை
    தமிழ்தான்
    காப்பாற்றியது.
    பசி நீக்கியது. நீங்கள்
    வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
    மகிழ்வுந்து,‘
    நீங்கள் உடுத்துகிற உடை
    அனைத்திலும்..
    உங்கள்
    பிள்ளைகள் படிக்கிற
    படிப்பில்.. புன்னகையில்
    எல்லாம்
    எல்லாம்!
    கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
    எங்கள்
    ஈழத் தமிழ் உறவுகளின்
    சதைப் பிசிறுகள்
    இரத்தக் கவுச்சிகள்
    அப்பிக் கிடக்கின்றன.
    அப்பிக் கிடக்கின்றன.
    மோந்து பாருங்கள்.
    எங்கள் இரத்த வாடையை
    மோந்து பாருங்கள்
    மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
    உங்கள்
    படத்தில் வருகிற கைபேசியின் மேல்
    வருகிற
    மூத்திர வாடைதானே உங்களுக்கு
    அதிகமாய் வரும்.
    கமல்..
    நகைச் சுவை என்பது
    கேட்கும் போது
    சிரிக்க வைப்பது!
    நினைக்கும் போது
    அழ வைப்பது!
    ஆனால் உங்கள்
    நகைச்சுவை
    செருப்பால் அடித்து
    எங்களைச்
    சிரிக்கச் சொல்கிறதே!
    இதில் வேறு வீரம்..
    அகிம்சைக்கான
    வியாக்யானங்கள்!
    அன்பான கமல்..
    கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
    கையெழுத்து மரபிற்கு
    அய்யாவும் அண்ணலும்
    கரையேற்றி விட்டார்கள்.
    இனியும் உங்கள்
    சூழ்ச்சி செருப்புகளை
    அரியணையில் வைத்து ஆளவிட்டு
    அழகு பார்க்க மாட்டோம்.
    சீதையைப் பார்த்து
    "உயிரே போகுதே'
    பாட மாட்டோம்.
    சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
    வன்மம் அள்ளித்தான்
    "உயிரே போகுதே'
    பாடுவோம்.
    ஆம்.. கமல்
    தாங்கள் சொல்லியபடி..
    எம்
    தமிழ்
    தெரு பொறுக்கும்!
    எவன்
    தெருவில்
    எவன் வந்து
    வாழ்வது
    என்று
    தெரு பொறுக்கும்!
    அப்புறம்
    எவன் நாட்டை
    எவன்
    ஆள்வது
    என்ற
    விழிப்பில்
    நாடும்
    பொறுக்கும்.
    அதற்கு
    வருவான்‘
    வருவான்
    வருவான்
    "தலைவன்
    வருவான்!'
    இந்தத் தலைப்பையாவது
    கொச்சை செய்யாமல்
    விட்டுவிடுவது நல்லது கமல்.
    நீங்கள் பிறந்த இனத்திற்கு
    நீங்கள்
    உண்மையாக
    இருக்கிறீர்கள் கமல்!
    நாங்கள்
    பிறந்த
    இனத்திற்கு
    நாங்கள்
    உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?

    அன்புடன்
    -அறி‌வு‌மதி
    Posted by விழியே பேசு... at 11:55 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ▼  January (439)
      • ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்...
      • திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு...
      • ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்...
      • அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாற...
      • விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த ...
      • கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி
      • 3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை ...
      • 'சீடன் என் படமல்ல!' - தனுஷ்
      • எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளிய...
      • கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று
      • ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பு...
      • வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்
      • சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!
      • த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
      • மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக...
      • ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!
      • ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
      • மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு...
      • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி ...
      • திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்
      • காதலர் தினத்திற்கு 2 படம்
      • மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!
      • செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆப...
      • ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்...
      • காதலர்களுக்காக சிம்பு கண்டிஷன்!
      • சின்ன சின்ன சினிமா செய்திகள்: என்னாச்சு இந்தப் பெண...
      • `3 இடியட்ஸ்' படத்தில், மீண்டும் விஜய்! :பிப்ரவரி 7...
      • ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது -நாகர்ஜுனா
      • விஜய் NDtv க்கு அளித்த பரப்பரப்பான பேட்டி
      • ஜேசுதாசுக்கு சுவாதி சங்கீத விருது
      • 'சூப்பர்' பட சிறப்புக் காட்சியில் ரஜினி!
      • 150 பெண்ணை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு த...
      • ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...
      • ஷங்கர் படத்திற்கு சூர்யா கேட்ட சம்பளம்
      • இது புதுசா, அல்லது அதேதானா? -குழப்பும் ராணாவும் சு...
      • குழப்பத்தில் விஜயகாந்த் விரக்தியில் விஜயகாந்த் ரசி...
      • நடிகை ரஞ்சிதா பெங்களூர் ராம் நகர் கோர்டில் ரகசிய வ...
      • நடிகை மீனாவின் குழந்தை பெயர் சூட்டு விழா பெயர்...
      • நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
      • விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: போலீசாரிட...
      • செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்
      • “ராணா” படத்தில் 2 நாயகிகள்: ரஜினி ஜோடியாக அனுஷ்கா,...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :. தனுஷ் செய்த ஜாங்கிரி
      • பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி ...
      • ரஜினியின் அடுத்த படம் ராணா:அனிமேஷன் படம் அல்ல மூன்...
      • தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுபவர்கள் பட்டியல்
      • பொம்பள சிவாஜி.....!!!
      • ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார...
      • நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது!
      • மன்மதன் அம்பு சுமாரான படமா? : மாதவனை எச்சரித்த கமல்
      • அழகுக்காக பல்லை சரி செய்தார் விஜய்
      • 'கரன்சி மெஷினாக' மாறிய சச்சின்! :ஒரு நாள் வருவாய் ...
      • விஜய் தந்தை தமிழக அரசுக்கு ஃபைன் கட்டினார்!
      • அவன் இவன்: தண்ணீருக்குள் 6 நாள் ஊறிய விஷால்!
      • பார்வையற்றோருக்கு உதவுங்கள் -ஸ்ரேயா
      • நயன்தாரா அம்மாவாக நடித்ததில் தவறில்லை -மனிஷா கொய்ராலா
      • த்ரீ இடியட்ஸ் லேட்டஸ்ட் நிலவரம்
      • ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டரை கன்னத்தில் அறைந்த சி...
      • மறைந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக மாரியம்மனுக்கு காங்க...
      • பில்லா 2-ல் அஜித் நாயகியாக அனுஷ்கா
      • கலைஞர் மனைவி கோவில் கோவிலாக சென்று சாமிதரிசனம் :ஐய...
      • தமிழர்களின் எதிர்ப்பால் ராஜபக்சே அமெரிக்காவை விட்ட...
      • நயன்தாரா-பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
      • ஹீரோவாகிறார் கண்ணதாசனின் பேரன்: மற்றும் பட போட்டோ...
      • இந்தி, தெலுங்கு படத் தோல்விகள்... தமிழிலாவது வெற்ற...
      • ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!! -வருமான வரித் ...
      • 'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!
      • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் ப...
      • ரஜினியுடன் நடிக்க கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா
      • இலங்கைக்கு கச்சதீவு சீனாவுக்கு அருணாசல பிரதேசமா......
      • காவலன் ஹிட் மற்றதெல்லாம் பிளாப்பே...
      • நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி
      • விஜய் நேற்று ஜெயா டிவி -க்கு அளித்த பரபரப்பு பேட்ட...
      • அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கு...
      • விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
      • மங்காத்தா கதை - இயக்குநரே சொன்னது ...
      • இந்திக்கு போகிறார் சிம்பு ...
      • இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் அபாயம்...
      • தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜ...
      • அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப ச...
      • ரஜினியுடன் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
      • கோடை விடுமுறையில் 'மாப்பிளை' வானம் எப்போது வரும்?
      • தொழில் அதிபர் மகனுடன் காதல்: தீபிகா படுகோனேக்கு ரூ...
      • அரசியலுக்கு வந்தால் ஊழலை எதிர்ப்பேன்; விஜய் பரபரப்...
      • பின்தங்கினான் காவலன் :சென்னை பாக்ஸ்ஆபீஸ் ரிப்போர்...
      • தெரியுமா சங்கதி...? விஜயின் அடுத்த படத்திக்கும் ப...
      • நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா
      • மகனை ஒப்படைக்க கோரி வனிதா சாலை மறியலால் :போலீஸ் தா...
      • சுனேனா அழக்காரணம் என்ன?
      • சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி பறிப்பு செல்லும்: ச...
      • மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு:விருது பெறு...
      • ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை
      • மாணவி அருஷி கொலை வழக்கு: கோர்ட்டுக்கு வந்த தந்தை ம...
      • த்ரி இடியட்ஸ் படப்பிடிப்பு ஊட்டியில் இன்று துவங்கியது
      • சம்பளத்தை ஏற்றினார் தனுஷ்
      • "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" -விஜய் ப...
      • உதயநிதி ஸ்டாலினை வைத்து கொண்டே...
      • ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க! சொல்கிறார் ஸ்ரேயா!!
      • தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்
      • புத்த மடத் தாக்குதல் குறித்து சீமான் கருத்து
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.