விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, April 30, 2011

    கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி


    தேர்தல் முடிவுக்கு முன், அனைத்து துறை அலுவலகங் களையும், புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிவிட வேண்டுமென்ற நோக்கோடு, தி.மு.க.,வின் செயல்பாடு அமைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே யான, "ஈகோ' பிரச்னையில் புதிய தலைமைச் செயலகம் சிக்கித் தவிக்கிறது.

    முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நடந்த போது, புதிய தலைமைச் செயலகம், "ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டுக்குள்ளாகவே புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. மேற்கூரை, "டூம்' தயாராகாததால், கலை இயக்குனரை கொண்டு இரண்டரை கோடி ரூபாயில், அவசரமாக, "செட்- அப் டூம்' வடிவமைக்கப்பட்டது. இதன்பின், சட்டசபை முழுமையாக தயாராகமலேயே, திரைசீலை போட்டு மூடப்பட்டு, பிரதமர், சோனியா ஆகியோரைக் கொண்டு திறக்கப்பட்டு, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரும் நடந்த பின், மூடப்பட்டு, சட்டசபை வளாகம் அமைக்கும் பணி, அடுத்த கூட்டத் தொடர் வரை மேற்கொள்ளப்பட்டது. அதுவும், அவசர அவசரமாக முடிக்கப்பட்டு, கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஆனால், புதிய சட்டசபை துவக்கப்பட்ட பின், ஒரு நாள் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சபைக்கு வரவில்லை. அதேபோல, சட்டசபையில் பேசிய அ.தி.மு.க.,வினரும், "இது சர்க்கஸ் கூடாரம் போல உள்ளது' என, கிண்டல் செய்தனர்.

    இந்நிலையில், பழைய சட்டசபை அவசரமாக, மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில், செம்மொழி நூலகம் அமைக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்து இருக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளும் அகற்றப்பட்டு, அடுத்து வேறு எந்த அரசு அமைந்தாலும் உடனடியாக அதை தயார் செய்ய முடியாத அளவுக்கு, மாற்றங்கள் செய்யப்பட்டன. அடுத்ததாக, இந்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களது அலுவலகங்கள் அவசரமாக தயார் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டன. இதனால், பழைய தலைமைச் செயலகத்தில் இருந்த அமைச்சர்களது அலுவலகங்களில் அனைத்து வசதிகளும் அகற்றப்பட்டு, அவை பூட்டப்பட்டன. இதன்பின், இந்த சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரும் முடிந்தது. அந்த சமயத்தில், சட்டசபை செயலகம் மட்டுமே, புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், ஒவ்வொரு துறைக்கான அலுவலகம் தயாரானதும், அந்த அலுவலகம் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், இங்கு மாற்றப்பட்டு வருகின்றன.

    இவ்வளவும் அடுத்தடுத்து நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அடுத்து, ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த தலைமைச் செயலகத்தில் தான் அது செயல்பட வேண்டுமென தி.மு.க., விரும்புகிறது. இதன் மூலம் சரித்திரத்தில் முதல்வர் பெயர் இடம்பெற வேண்டுமென்பது ஆளுங்கட்சியின் கருத்தாக உள்ளது. இதற்காகவே, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இக்கட்டடத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதுவே, கோட்டையில் இருந்து துறைகளை அவசரமாக புதிய வளாகத்துக்கு மாற்றுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., தரப்போ, கருணாநிதிக்கு பெயர் பெற்றுத் தரும் இந்த புதிய வளாகத்தில் இயங்குவதை விரும்பவில்லை. சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "அடுத்து அம்மா தலைமையில் கோட்டையில் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும்' என்றார். தற்போது கோட்டையிலிருந்து துறைகள் அவசரமாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக, கோப்புகளை அழிக்க முயற்சிகள் நடப்பதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை கண்டித்து, முதல்வர் கருணாநிதி சார்பில், அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில், கோப்புகளை மாற்றுவதற்கு, அ.தி.மு.க., கவலை கொள்ளவில்லை. முக்கிய துறைகள் மாற்றப்பட்டால், அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி அமையும் பட்சத்தில், புதிய வளாகத்தில் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அதை தடுத்தாக வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், இரண்டு கட்சிகளின், "ஈகோ' பிரச்னையில் சிக்கி தவிக்கிறது.

    கடந்த ஆட்சியில், எதிர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருந்த போது, புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். அது பற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, "நன்றாக கட்டட்டும்; அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து அதில் ஜம்மென்று அமர்ந்து கொள்வோம்' என்றார். அதுபோல, ஜெயலலிதாவும், "புதிய தலைமைச் செயலகத்தில் வந்து அமருவோம்' என்று ஒரு வார்த்தை தெரிவித்து இருந்தால், இந்த அளவுக்கு துறைகளை மாற்றுவதில் வேகம் காட்டப்பட்டிருக்காது என்கிறது அதிகாரிகள் வட்டாரம்.


    Posted by விழியே பேசு... at 9:51 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.