விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, April 28, 2011

    தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி


    தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

    இலங்கையில் நடந்த இறுதிப்போரில் 40,000 அப்பாவித் தமிழர்களை குண்டு வீசிக் கொன்று குவித்து இன அழிப்பு செயலில் ஈடுபட்டதாக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதையடுத்து சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந் நிலையில் போர்க் குற்றம் புரிந்துள்ள ராஜபக்சேவை கண்டித்தும், அவரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தக் கோரியும் மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை முன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், நடந்த போராட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அப்போது வீரமணி பேசுகையில், உலகம் கண் திறந்துவிட்ட இந்த நேரத்தில் ஐ.நா.சபையே இப்படிப்பட்ட ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், கடந்த கால செயல்களுக்கு கழுவாய் தேட முயல வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்ற அந்த நிலையிலே செயல்பாட்டில் இறங்க வேண்டும். அந்த செயல்பாடு என்ன வென்றால், ஈழத் தமிழர்களுக்கு போர்க் குற்றவாளியாக இருக்கக் கூடியவர்களை கூண்டிலே ஏற்ற வேண்டும் என்று இந்திய அரசு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

    ஈழத் தமிழர் வாழ்வுரிமையை பெறுவதற்கு தனி ஈழமே தீர்வு. ஒத்த கருத்துடைய அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்டமாக, தமிழ் ஈழ மாநாட்டையே நாங்கள் தமிழகத்தில் நடத்துவதற்கு யோசிப்போம் என்றார்.

    இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு தண்டனை-மார்க்சிஸ்ட்:

    இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் மீது தொடுத்த இறுதிக்கட்ட ஆயுத தாக்குதலில் (2008 செப்டம்பர் முதல் 2009 மே வரை) வன்னி பகுதியில் சுமார் 3,30,000 அப்பாவி தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றோர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.

    பெரும் எண்ணிக்கையில் அப்பாவித் தமிழர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் யுத்தத்திற்குப் பிறகு ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கிறது.

    ஆயுத மோதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற குழுவினர் மீதும், மருத்துவமனைகள் மீதும், ஐ.நா.சபை அலுவலகங்கள் மீதும். ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், நிவாரணம் வழங்கிடவும் சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது.

    தாக்குதலுக்கு ஆளாகி பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய தமிழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் இலங்கை ராணுவம் அனுமதிக்காத காரணத்தாலேயே உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

    ஆயுத மோதலின்போது விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தியது, சிறுவர்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை ஐ.நா.குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டி இருப்பினும், இலங்கை ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாகவே உரிமைக்காக போராடிய தமிழர்களும், அப்பாவி தமிழ் மக்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இது அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். இத்தகைய கொடிய மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். மனித உரிமைகளை மீறி, பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மீது மனித உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை செயல்படுத்தும் வகையில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட, மத்திய அரசு தனது ராஜ்ய உறவை பயன்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    மேலும், ஆயுத மோதல்கள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இன்னும் முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. சம உரிமை, மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளிலும் முழுமையான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி வழங்கிடவும், நீண்ட காலமாக தீர்க்கப்படாத இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் இலங்கை அரசு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காண, இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்கள் அமைப்புகளோடும் பேச்சுவார்த்தை நடத்திடவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாக பயன்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 4:31 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.