விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 24, 2011

    ‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம்


    திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு   “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

    ’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும்.


    நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார்.
     தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

    “ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்;  இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.”

    “இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?” (திராவிட நாடு 27.6.1948) என்று “விடுதலை” சார்பில் நின்று விவேகக் குண்டுகளை  வீசினார் அண்ணா.


    தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல;

    நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு.

    1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப்பற்றி எழுதியது “விடுதலை”; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.

    குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் “விடுதலை”யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும்.

    சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? “விடுதலை” தானே?
    31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது “விடுதலை”யே!

    ஏன்? இன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் “விடுதலை”யன்றோ!

    ஆட்சிகள் போகலாம் - வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை.

    மே.16ஆம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் “விடுதலை” ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

    2012 மார்ச்சு வரை அரசு நூலகங்களில் “விடுதலை” இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் - அவசரம் ஏன்? ஏன்?


    மாறுபட்ட கருத்துகள் - விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா?  ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.

    பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே  வீரநடை போடும் ஒரே ஏடு “விடுதலை”யே! இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா?

    அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!

    அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதல் அமைச்சர் திடீரென்று “விடுதலை”யை நிறுத்தியது எந்த அடிப்படையில்?  அல்லது அவர் அறியாமல் “அதி விசுவாசிகளான’’ அதிகாரிகளின் வேலையா இது?

    பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட “விடுதலை” ஏடு பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா?

    அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு - காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?
    எப்படிப்பட்ட “விடுதலை?” தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி. நாதன், பண்டித எ. முத்துசாமிப்பிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே!

    அண்ணாவின் பெயரையும் “திராவிட” என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான - அதன் தாய் என்று சொல்லத்தக்கதான “விடுதலை” ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா?

    புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்! - போர் வாள்!!

    கடலூர், மதுரை சிறைகளில் “விடுதலை”க்குத் தடை போடப்பட்டது - சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!
    பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம்!

    1935இல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான “விடுதலை” ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதல் அமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.


    நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு “விடுதலை”க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
    முதல் அமைச்சர் பரிசீலிக்கட்டும்!


    முதல் அமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க  ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

    கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்!
    பணிகளை உடனே துவக்குங்கள்!!’’ என்று தெரிவித்துள்ளார்.



    Posted by விழியே பேசு... at 8:18 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ▼  May (668)
      • காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்
      • ஹன்சிகா புது முடிவு!
      • தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்
      • ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக...
      • ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!
      • முதன் முதலாக விக்ரம்!
      • அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !
      • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரத...
      • நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!
      • வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'
      • இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிட...
      • போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ...
      • செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!
      • அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவ...
      • அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசா...
      • வடிவேலுவை சீண்டிய விவேக்
      • இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!
      • மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே ...
      • ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...
      • செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற...
      • தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ...
      • கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு
      • ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி மு...
      • கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.
      • பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்...
      • முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைத...
      • சினிமாவால் பாதிப்பு! முன்னாள் முதல்வர் வேதனை!!
      • தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போ...
      • பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சர்
      • அரசு பணத்தில் ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன்: வி...
      • மம்முட்டிக்கு ஜோடியான மிஸ் இந்திய அழகி!
      • கமலின் விஸ்வரூபத்தில் ஸ்ரேயா...?
      • விக்ரமிற்கு டாக்டர் பட்டம்: போட்டோக்கள்
      • பிஸியான அனுயா!
      • மரியம்பிச்சை மரணம்: விபத்துக்கு காரணமான லாரி பிடிப...
      • சீமானின் பகலவன் படத்தில் விஜயின் ஜோடி ?
      • சூர்யா காலில் விழும் விஷால் ஆர்யா? -ரசிகர்களுக்கு...
      • ஜெயலலிதாவின் புதிய முடிவால் அதிர்ச்சியில் விஜய்
      • டெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...
      • மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிக...
      • 'காங். சரிவுக்கு இந்திரா காந்தியே காரணம்'
      • ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரகுமான் நான் பணம் கொடுத்து வா...
      • ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை;...
      • அம்மா புகழ் பாடும் விஜய் :"அம்மா ஆட்சி அமைய அணிலாக...
      • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
      • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினியின் தற்போதைய உட...
      • ஹீரோவாகிறார் நமீதா!
      • ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...? -வெற்றிமாறன்...
      • அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை
      • திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி
      • முரண்டு பிடிக்கும் விஜய் வெளிநாட்டு தமிழர்கள் வாட்டம்
      • ஒரு கோடி சம்பளம்... சந்தர்ப்பவாதியான நடிகை!
      • அவன் இவன் - வேங்கை இரண்டையும் கைவிட்ட சன்!
      • ஜெயலலிதாவை ஈழத்திற்கு வரவழைக்க இலங்கை திட்டம்?
      • தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன்: வெற்றிமாறன்
      • அதிமுக அரசின் சா(சோ)தனைகள் : மதிமுகவினர் ஒட்டிய போ...
      • மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்ன...
      • அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் க...
      • விஜய் அப்பாக்கு கோர்ட் தடை!
      • நான் விலைமாதா தான் ஆவேன்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
      • முதல்ல விக்ரம்; அப்புறம் சிம்பு: தீக்ஷாவுக்கு அடுத...
      • பியாவுடன் விஜய் காதல்?
      • நாற்பதை தொட்ட த்ரிஷா...!
      • எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கிற அரசியல் சக்தி ரஜி...
      • கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!
      • ஹஸன் அலியுடன் நெருக்கமாக இருந்த ஜெயப்ரதா, அமர்சிங்!
      • ஜெ.வை கொல்ல சதியா? -மனம் திறக்கும் புலிகள்!
      • ஜெ. உத்தரவு-செருப்பு போட ஆரம்பித்தார் அமைச்சர் உதய...
      • சோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...
      • கமிஷனர் அலுவலகத்தில் உண்ணாவிரதமிருக்க வனிதா முயற்சி!
      • ரசிகர்களுக்காக ரஜினி பேசிய உருக்கமான பேச்சு - ஆடிய...
      • ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா?-டாக்டர...
      • சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரஜினியைக் காண குவிந்...
      • தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நில...
      • என் ரஜினியைப் பார்க்க முடியாதா? -துடித்த கமல்! .. ...
      • ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... ; பரபரப்...
      • பாக்கணும் போல இருக்கு!
      • உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!
      • மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல்
      • ரஜினி சிங்கப்பூர் செல்வது ஏன்?
      • தயாரிப்பாளருக்கு தெரியாமல் படத்தை விற்ற ஹீரோ!
      • ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி : முகம...
      • அநாகரிகத்தில் 6 படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்க...
      • ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : மீடியாக்கள் பரபரப்பு
      • போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் : பத்திரிகைகாரர்கள் கு...
      • சல்மான்கானை முத்தமிட்டேனா? -அசின்
      • பெங்களூர் மைதானத்தில் ஆபாசமாக முத்தமிட்டார்: தீபிக...
      • எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-...
      • புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்
      • சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு
      • 5 மாணவிகள் முதல் இடம்; 11 பேர் 2-ம் இடம், 24 பேர் ...
      • ரஜினிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை?
      • சன் டிவி நிறுவனத்தின் லாபம் ....?!
      • கையில இலவச டிவி 'டோக்கன்'- வாயில 'அல்வா'?
      • 'ஸ்விட்ச் ஆப்' ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி!
      • தாவூத் 'காதலி' இலியானா?!
      • ஹிட்லரின் 'பேசும் நாய்கள்'!
      • 2011-2012ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவ...
      • 29 இடங்களில் வெற்றி: தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்...
      • பகலில் கொலை-இரவில் எரிப்பு-வலம் வரும் திகில் கும்பல்!
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.