விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, January 18, 2012

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக பல இலவச சலுகைகள் ஜெயலலிதா அறிவிப்பு


    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப கல்வியே மிகச் சிறந்த செல்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வியானது நற்பண்புகளையும், நல்ல குறிக்கோள்களையும் குழந்தைகளிடையே விதைத்து அவர்களை சமுதாய உணர்வு உள்ள நல்ல குடி மக்களாக உருமாற வழி வகை செய்கிறது.

    இதனை நன்கு உணர்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இன்பமான சூழ்நிலையில் பெறுவதற்கான பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் அடிப்படையில் 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1-வது வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இதில் 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாண வர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர்.

    இதனால் அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா ஒரு இணை காலணி வழங்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 27 லட்சத்து 95ஆயிரத்து 639 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில், 1 இணை காலணியும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புபயிலும் 18 லட்சத்து 5ஆயிரத்து 933 மாணவ மாணவியர், ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில் ஒரு இணை காலணியும், இந்த ஆண்டே வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவையன்றி, மாணவ, மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி அதாவது (ஜாம்மின்டிறிபாக்ஸ்) கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை வரும் கல்வியாண்டு முதல், அதாவது 2012-13 முதல் வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இத்திட்டத்தின்படி 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தினால் 92 லட் சத்து 28 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இதே போன்று, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 35 ரூபாய் மதிப்பில் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும். இதனை மாணவ, மாணவியர் இரண்டு கல்வியாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,8,10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும்.

    இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
    1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 20 ரூபாய் மதிப்பிலான வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 50 ரூபாய் மதிப்பிலான புவியியல் வரை படங்கள் வழங்கப்படும்.

    முதல் ஆண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

    புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர் பயன் பெறுவர். இத்திட்டத்திற்காக அரசுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதல் பரிசான 1,500 ரூபாயை 3,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை, 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயை 1,000 ரூபாயாகவும், 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயை 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மாணவ, மாணவியர் நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படவும் வழி வகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 8:05 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ▼  January (336)
      • கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
      • இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்க...
      • கமலுக்கு ஜோடியாக் கேத்ரினா ?!
      • கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ...
      • என்ன இரண்டாவதா? முகம் சிவந்த தமன்னா!
      • ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ர...
      • காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
      • கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில...
      • '1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!
      • ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ...
      • ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்...
      • டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு
      • உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம...
      • கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது
      • தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்'...
      • மைக்கல் ஜாக்சன் வழியில் பிரபுதேவா 'ஆல்பம்' !
      • நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
      • "டாஸ்மாக்கும் கவிஞர் வாலியும்"
      • ஒரு கோடி ரூபாயும் : சிவபதி அமைச்சரான பின்னணியும்
      • பத்தாயிரம் கோடி பட டைரக்டருக்கு மிரட்டல்!
      • சூர்யா ஜோடி ! : ஹன்சிகா குஷி
      • டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
      • காதல் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா சமரச முயற்சி தோல்வி
      • பாரதிராஜா - அமீர் : மோதல்! மீண்டும் பார்த்திபன்...?
      • அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருதா? அமைச்சர் எதி...
      • சசிகுமாருடன் இணைந்து பாலுமகேந்திரா இயக்கும் புதிய ...
      • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்: உ....
      • ஊழல்வாதிகளை விரட்டுவேன்: ராகுல்
      • தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை !
      • ராமேசுவரம் கோர்ட்டில் டைரக்டர்கள் சீமான்-அமீர் ஆஜர்
      • சசிகலாவுக்கு தங்கை கணவர் கைது
      • புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்...
      • ஆட்டம் போடும் அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயார...
      • இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்! - கூக...
      • விஜய் கட்சியில் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவிக்கு ர...
      • 'நண்பன்' உண்மை நிலை பட்ஜெட்டில் பாதியை வசூலித்தாலே...
      • காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அ...
      • 'வடசென்னை' பயிற்சிப் பட்டறை !
      • ஊழல் செய்பவர்களின் கன்னத்தில் அறைவதற்கு அன்னா ஹசார...
      • சசிகலா ஆதரவாளர்களின் ரகசிய செல்போன் பேச்சு: உளவுத்...
      • 'விஸ்வரூபம்'.. அடுத்து ?
      • ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் சினிமா படங்கள் அறி...
      • நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்
      • இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் அற...
      • மீண்டும் சினிமா பிரவேசம்: நயன்தாரா-பிரபுதேவா காதல்...
      • மானமுள்ள தமிழன் எரித்தான் அப்துல் கலாமின் கொடும்பாவி
      • மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி
      • ரூ. 2 கோடி கூலி...பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட!
      • ஆணை பலவீனமாக இருக்கிறது என்று தான் சொல்லணும் : கேரளா
      • 'அம்மா'வுக்கு இது தெரியுமா?
      • பூமியை தாக்கும் சூரிய புயல்: விஞ்ஞானிகள் தகவல்
      • தமிழக வியாபாரியுடன் நிச்சயம் நடந்ததா...: அசின்
      • ஈகோ இல்லை ! : கமல்
      • தள்ளிப் போகும் பில்லா-2, 3, சகுனி, !
      • இந்தி படத்தில் தனுஷ்
      • 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பில் தகவல்
      • எவ்வளவு தான் அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் தமிழன்! ...
      • ட்விட்டரில் பிரதமர்
      • தமிழக மீனவர்கள் மீது குண்டு வீச்சு இலங்கை அராஜகம்!!
      • நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...
      • 'திஹார் தியாகத்திற்காக' கனிக்குக் கிடைக்குமா 'கனமா...
      • ரஜினி பெயரில் உலகின் முதல் ஆஃப் லைன் இணையதளம்
      • பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு
      • எப்படி நாட்டை ஏமாற்றலாம் நீங்கள்?-பிரதமருக்கு அன்ன...
      • விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?
      • காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்...
      • ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்...
      • 70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய ல...
      • கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்
      • 100 கோடியை நோக்கி !: நண்பன்
      • ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!
      • இலங்கையில் தமிழர்கள் முகாம்களுக்கு சென்று பார்வையி...
      • திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை து...
      • பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன்: நடிகர் விஜய் பேட்டி
      • கோச்சடையானில் ரஜினியுடன் ஷோபனா!
      • மத்திய அரசிடம் இருந்து தப்பித்தது இணையத்தளங்கள் ..!
      • விஜய்யை அடித்ததால் ரசிகர்கள் கோபமா? -ஸ்ரீகாந்த்
      • ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்...
      • கொலவெறி குழுவோடு இணையும் ஆஸ்கர் விருது பெற்றவர் !
      • சூர்யாவால் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சண்டை
      • சந்தோஷத்தில் அருள்நிதி !
      • திவாலானது அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம்
      • அஜீத்திற்காக..! : ' போர்க்களம் ' பண்டி சரோஜ்குமார்
      • ரஜினிக்கு பிறகு விஜய்...
      • ரஜினி அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய ...
      • புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை
      • ஜெ. அரசுக்கு அடி மேல் அடி!
      • இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திட...
      • தனுஷுடன் இணைத்து கிசுகிசு - குமுதம் பத்திரிகைக்கு ...
      • அமெரிக்காவுக்கு யுவன் : பில்லா 2
      • முல்லைப் பெரியாறு:தமிழக இளைஞர் காங். பொறுப்பாளராக ...
      • சிம்பு படத்தில் ஷகீரா !
      • பூக்கடை - இல்லை !
      • விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!
      • துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !
      • நடப்பது திமுக ஆட்சி மாதிரியே இருக்கு-விஜயகாந்த் சாடல்
      • ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ...
      • இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ...
      • வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ள...
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.