மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27-ந்தேதி நெல்லையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
அதே போல மதுரையில் தேவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித் துள்ளளனர். இதனை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில், அதே நேரத்தில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் போட்டி பேரணி நடத்தப்படும். அதே போன்று மதுரையில் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கோவில்களில் இருந்து வரும் வருமானங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே செலவிடப்படும்.
மதுரை ஆதீன மடம் சார்பில் வருகிற 26, 27-ந்தேதிகளில் மதுரை ஆதீன மடத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment