எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை ஒரிசாவின் பலசோர் பகுதியை அடுத்த சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் ஏவப்பட்டது.
வாகனத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை விண்ணில் நிறுவப்பட்டிருந்த மாதிரி விமானத்தை வெற்றிகரமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை வீழ்த்தும் ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்டது.
மேலும் எதிரிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் ரேடாரின் உதவியுடன் உடனே தாக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதே ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினமும் சோதனை செய்தது.
No comments:
Post a Comment