விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, May 3, 2012

    ஜனாதிபதி தேர்தல்: முதல் சுற்றில் காங்கிரஸ் வெற்றி.. தடுமாறுகிறது பாஜக!


    ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததால் அந்தக் கட்சியால் எந்த வேட்பாளரையும் நிறுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், தனது கூட்டணிக் கட்சிகளையும் நடுநிலையாக உள்ள பிற கட்சிகளையும் வேகமாக வளைத்து வருகிறது காங்கிரஸ்.

    இதனால் காங்கிரஸ் கட்சி நிறுத்தும் அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜி தான் அடுத்த ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

    ஜனாதிபதியாகும் தகுதி துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கு இல்லை, பிரணாப் முகர்ஜி ஒரு அரசியல்வாதி.. இதனால் அவரை ஆதரிக்க மாட்டோம் என பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    சுஷ்மாவின் பேச்சு அவரது சொந்தக் கருத்து, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அந்தக் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஷரத் யாதவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறிவிட்டனர்.

    மேலும் பெரும்பான்மையான கட்சிகளால் ஏற்கப்படும் வேட்பாளரை ஆதரிப்போம் என்றும் ஷரத் யாதவ் கூறியுள்ளார். இது சுஷ்மா சொன்ன, ''காங்கிரஸ் வேட்பாளரை ஏற்க மாட்டோம், அன்சாரியை ஏற்க மாட்டோம்'' என்ற கருத்துக்கு எதிராக உள்ளது. இதனால் தான் சொன்னதை திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு பாஜக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

    அதே போல பாஜக கூட்டணியைச் சேர்ந்த இன்னொரு கட்சியான அகாலிதளம், அதன் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பாதலுக்கு அவரது கட்சியைத் தவிர வேறு யாருடைய ஆதரவும் இல்லை. இதனால் பாஜக பெரும் குழப்பத்தில் உள்ளது.

    இந்த விஷயம் குறித்து விரைவில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கப் போவதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். முதலில் கூட்டத்தை நடத்தி ஆலோசித்துவிட்டுத் தானே இந்த விஷயத்தில் சுஷ்மா மூலம் கருத்தே தெரிவித்திருக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கூறுவதாகத் தெரிகிறது.

    அதே நேரத்தில் ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் குழம்பித் தவித்த காங்கிரஸ் தலைமை மிக வேகமாக செயல்பட்டு தனது வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட ஆரம்பித்துவிட்டது.

    முதலில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரணாப் அல்லது அன்சாரிக்கு ஆதரவு கோரியது. கருணாநிதியோ இடதுசாரித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்தலாம் என்று கூறிவிட்டு, சோனியா யாரை நிறுத்தினாலும் ஆதரிக்கத் தயார் என்று அறிவித்துவிட்டார்.

    அதே போல தேசியவாத கட்சியின் தலைவரான சரத் பவாரும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

    எந்தக் கூட்டணியையும் சாராத சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் அல்லது முஸ்லீம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அன்சாரியை காங்கிரஸ் நிறுத்தினாலும் அவரது ஆதரவு கிடைக்கும் என்றெ தெரிகிறது.

    அதே போல ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரான லாலு பிரசாத் யாதவ், அன்சாரிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். அன்சாரி அல்லாமல் பிரணாப் நிறுத்தப்பட்டாலும் அவர் ஆதரிப்பார்.

    அன்சாரியை பாஜக எதிர்ப்பதால், அவரை ஆதரிக்க இடதுசாரிகளும் தயாராவார்கள் என்றே தெரிகிறது. இதே நிலையை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் எடுக்கும் என்று தெரிகிறது.

    ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் இந்த விஷயத்தில் மெளனம் காத்து வருகிறார்.

    ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா பாஜக எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரிக்கத் தயாராக உள்ளார். இந்த விஷயத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் தொடர்பில் இருக்கிறார். நவீன் பட்நாயக்கின் ஆதரவைப் பெறவும் ஜெயலலிதா-மோடி முயல்வார்கள் என்று தெரிகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்தாலும் இடதுசாரிகள்- முலாயம்- மம்தாவின் ஆதரவு இல்லாமல் இவர்களால் ஏதும் செய்விட முடியாது.

    இப்போது காங்கிரசுக்கு சிக்கலாக இருப்பது மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மட்டுமே. அவருடன் சோனியா இரு முறை இது தொடர்பாக பேச்சு நடத்திவிட்டார். அவர் தனது மாநிலத்துக்கு அதிக நிதியைக் கோருகிறார். இது தொடர்பான உத்தரவாதம் தரப்பட்டுவிடும் என்று தெரிவதால், அவரது ஆதரவும் காங்கிரஸ் வேட்பாளருக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியை ஜனாதியாக ஏற்க மண்ணின் மைந்தன் என்ற நிலையில் மம்தா தாயாராவே உள்ளதாகத் தெரிகிறது.

    மம்தாவின் நிதி கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவரை சந்திக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் முன் வந்துள்ளார். இன்று இருவரும் சந்தித்துப் பேசும்போது அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து கிட்டத்தட்ட முடிவாகி என்று தெரிகிறது.

    காங்கிரசுக்கு இப்போதுள்ள ஒரு பிரச்சனை அன்சாரியா அல்லது பிரணாப் முகர்ஜியா என்பது தான். மற்றபடி அடுத்த ஜனாதிபதியை அந்தக் கட்சி தான் முடிவு செய்யப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால், பாஜகவுக்கு இந்த விஷயத்தில் எல்லாமே பிரச்சனையாக உள்ளது.



    Posted by விழியே பேசு... at 10:42 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
      • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடங்கி மூன்று வரு...
      • கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படம...
      • இன்றைய செய்திகள் (22-05-2012)(செய்தி,சினிமா, விளைய...
      • நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிம...
      • கடும் 'பசியில்' மத்திய அரசு.. 'டயட்டில்' திமுக! வி...
      • பிளஸ்டூவில் தேர்வில் கலக்கிய பேரறிவாளன் 1096, முரு...
      • ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பே...
      • வயிறு வலின்னு வந்த மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது
      • +2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும்...
      • ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த ம...
      • நியூயார்க் சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது
      • ப்ளஸ் டூ தேர்வில் 86.7% பேர் தேர்ச்சி - மாணவியரே வ...
      • தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம்
      • அரவான் நஷ்டத்தை ராட்டினம் சரிகட்டிய கதை!!
      • முல்லைப்பெரியாறை தொடர்ந்து கேரளாவின் அடுத்த வம்பு
      • நடிகையின் இடுப்பில் டான்ஸ் மாஸ்டர்
      • ராஜா வரவேற்பு - தி.மு.க., வருத்தம்
      • பகலவன் படத்தில் விஜய் இல்லை சீமான் அறிவிப்பு
      • அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவ...
      • நேட்டோ மாநாட்டில் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதி...
      • இன்றைய செய்திகள் (21-05-2012)
      • ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரி...
      • ராட்டினம் திரைப்பட வீடியோ பாடல்கள்
      • பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க பராக் ஒபாமா ம...
      • ஜூன் மாத இறுதியில் கோச்சடையான் இசை!
      • ஊட்டி, கொடைக்கானலுக்கு மின்வெட்டில் இருந்து விலக்க...
      • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
      • விஜயகாந்த் ஆதரவு கேட்டால் மேலிடம் முடிவு செய்யும்-...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.