யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்துவாரை தலைமையிடமாக கொண்டு 4 அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைகள் மூலம் அவர் ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
அவரது அறக்கட்டளைக்கு இதுவரை வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சிறப்பு தணிக்கை நடத்தியது.
இந்தநிலையில் அவரது 4 அறக்கட்டளைகளில் இருந்து 2009-2010 ஆண்டு ரூ.120 கோடிக்கு வருவாய் கிடைத்து உள்ளது. அதற்கு அந்த அறக்கட்டளைகள் வருமான வரியாக ரூ.58 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அவரது அறக்கட்டளைக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.

No comments:
Post a Comment