விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, October 8, 2014

    'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்!'- ஜெயலலிதா



    செப்டம்பர் 27-ம் நாள் முதல்  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை.  சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் ஜெயசிம்ஹா!


    ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையின் டி.ஐ.ஜி-யான அவரை நேரில் சந்தித்தோம்.

    ''பரப்பன அக்ரஹாரா சிறையில் மொத்தம் எத்தனை பெண் கைதிகள் இருக்கிறார்கள்?''

    ''விசாரணைக் கைதிகள் 89 பேர். குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் 46 பேர். மொத்தம் 135 கைதிகள் இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரும் அடக்கம். கர்நாடக மாநிலத்திலேயே அதிக அளவு பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இதுதான்.''

    ''எப்படி இருக்கிறார் ஜெயலலிதா?''

    ''அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர், பிரஷர் சீராக இருக்கிறது. 24 மணி நேரமும் சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு அலார்ட்டாக இருக்கிறது. 28-ம் தேதி ஒருநாள் மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர் அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில் இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை ஆறு மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு அந்த அறையை அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும் அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும் அதிக தூரம் அவர் நடப்பதில்லை.''

    ''என்ன சாப்பிடுகிறார்?''

    ''பெரும்பாலும் பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான் சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் விதவிதமான காலை உணவுகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம், புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள் புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம், ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.''

    ''ஜெயிலுக்குள் ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?''

    ''அப்படி எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை 8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக வாசிக்கிறார்.''

    ''பார்வையாளர்கள் யாரையாவது ஜெயலலிதா சந்தித்தாரா?''

    ''ஜெயலலிதா அவரைச் சந்தித்தார்... இவரைச் சந்தித்தார் என்று யூகமாக பல செய்திகள் வெளி வருகின்றன. ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன்... உள்ளே வந்ததில் இருந்து இதுவரை அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்பி மனு போடும் அனைவரின் பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம். வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பலை!’ என்று சொல்லிவிடுகிறார். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி இருக்கிறார்கள். மாலை ஆறு மணி ஆனதும் மூவரையும் தனித்தனி  அறையில் அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால், இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை அவர் சந்திக்கிறார்.''

    ''உங்களிடம் ஜெயலலிதா பேசினாரா?''

    ''நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

    ''ஜெயலலிதா, சிறைக்குள் ஸ்பெஷலான ஓர் அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கே ஏ.சி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகிறதே?''

    ''அத்தனையும் தவறான தகவல்கள். 27-ம் தேதி அவர் எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில்தான் இப்போதும் இருக்கிறார். இந்தியாவில் எந்த ஜெயிலிலும் ஏ.சி கிடையாது. அப்படியிருக்க இங்கே மட்டும் எப்படி ஏ.சி இருக்கும்?''


    -வீ.கே.ரமேஷ்

    நன்றி - விகடன்


    Posted by விழியே பேசு... at 11:50 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.