விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, October 9, 2014

    லஞ்சப் பணத்தை வெள்ளையாக்க ஜெ தொடங்கிய 'டுபாக்கூர்' நிறுவனங்கள்!

    ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 1,136 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு விவரத்தை படிக்க படிக்க ஏராளமான தகவல்கள், திகில் விஷயங்கள், அதிர வைக்கும் விவகாரங்கள்... தீர்ப்பிலிருந்து கொஞ்சம் இதோ....

    பெயர்: ஜெயலலிதா

    தொழில்: முதல் அமைச்சர் (அரசு ஊழியர்)

    முந்தைய சொத்து மதிப்பு: முதல்வர் ஆகும் முன் ஜெயலலிதா காட்டிய மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2 கோடி லஞ்சப் பணத்தை வெள்ளையாக்க ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் தொடங்கிய 'டுபாக்கூர்' நிறுவனங்கள்!
    1991-1996 காலகட்டத்தில் வருமானம்: முதல்வர் சம்பளம் மாதம் 1 ரூபாய். மற்ற வகைகளில் ரூ. 9.91 கோடி (இதில் பல வங்கிகளில் வாங்கிய லோன்களும் அடக்கம்)

    1991-1996 காலகட்டத்தில் செய்த செலவு: ரூ. 8.49 கோடி
    மிச்சம் இருந்தது: ரூ. 1.4 கோடி

    இந்த காலகட்டத்தில் ஜெ., சசி, இளவரசி வாங்கிய சொத்துக்களின் மதிப்பு: ரூ. 55 கோடி. இவர்களது செலவுகளையும் கணக்கில் சேர்த்தால் சொத்தின் அளவு 
    மொத்தம் ரூ. 63.5 கோடி

    கேள்வி: வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவ்வளவு சொத்தும் பணமும் எங்கிருந்து வந்தது?

    சசிகலாவின் வருமானங்கள் மூலமாக இந்தப் பணம் வந்திருக்கலாமே என்று வாதாடக் கூட முடியாது. காரணம், ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா வாழ ஆரம்பிப்பற்கு முன் அவரது சொத்து 

    விவரங்கள் இவை தான்.

    பெயர்: சசிகலா

    தொழில்: ஏதும் இல்லை. 

    அரசுத்துறையில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த கணவர் நடராஜனின் வருமானம் மட்டுமே
    முந்தைய சொத்து மதிப்பு: 1987ம் ஆண்டு நடராஜன் வீடு வாங்கவே லோன் வாங்கியுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ. 3,000 லோன் வாங்கியவர் நடராஜன்.

    நடராஜனின் தந்தை சாமிநாதன் மன்னையார் மற்றும் சித்தப்பா பழனிவேல் ஆகியோருக்கு சேர்த்தே 24 ஏக்கர் நிலம் தான் இருந்தது. நடராஜனின் தாயார் லீலாவதி பெயரில் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. ஆக, நடராஜன் தந்தை-தயாருக்கு என சொந்தமாக இருந்தது 17.5 ஏக்கர் நிலம் மட்டுமே. இந்த நிலம் நடராஜனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. உடன் பிறந்தவர்களுக்கும் பங்கு இருந்தது. இதன்மூலம் நடராஜனுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது.

    சசிகலாவின் தந்தை விவேகானந்தன் ஒரு நாட்டு வைத்தியர். அவருக்கும் 9 பங்காளிகளுக்கும் சேர்த்து இருந்த மொத்த நிலமே வெறும் 81 சென்ட் மட்டுமே. இந்த சொத்தில் சசிகலா, வனிதா மற்றும் 6 சகோதரர்களுக்கு பங்கு இருந்தது. இதனால் சசிகலாவுக்கும் பூர்வீகச் சொத்துகள் என சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.

    மேலும் சசிகலா வருமான வரி கூட கட்ட வேண்டிய நிலையில் கூட இருந்தது இல்லை. ஜெயலலிதாவுடன் வசிக்க ஆரம்பித்த பிறகே அவரது வருமானம் கிடுகிடுவென அதிகரித்து வருமான வரி கட்டவே ஆரம்பித்தார்.
    அப்படி என்றால் இளவரசி மூலமாக கிடைத்த வருமானத்தில் ரூ. 53.60 கோடி சொத்துக்களை வாங்கியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம், இளவரசியின் பொருளாதார நிலைமை இருந்த நிலை அப்படி...

    பெயர்: இளவரசி

    தொழில்: ஏதும் இல்லை

    வருமானம், முந்தைய சொத்து மதிப்பு: இவரது கணவர் ஜெயராமன் உணவு வழங்கல் துறையில் வேலை பார்த்த கிளார்க். வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க இளவரசி தாக்கல் செய்த வருமான சான்றிதழில் கூறியுள்ளபடி ஆண்டு வருமானமே ரூ. 48,000 தான். அதாவது, மாத வருமானம் ரூ. 4,000 மட்டும் தான்.
    (ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியானவர் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது)

    சரிப்பா, அப்படீன்னா சுதாகரன் என்ற மாபெரும் மனிதர் இருக்கிறாரே. அவரது வருமானம் மூலம் சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வாங்கியிருப்பார்கள் என்று வண்டு முருகன் வக்கீல் கூட வாதாட முடியாது. காரணம்,

    பெயர்: வி.என்.சுதாகரன்

    தொழில்: அப்படி ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை

    சசிகலாவின் அக்காள் வனிதாமணி- டி.டி.விவேகானந்தனின் மகனான சுதாகரன் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் நிலைக்கு வந்ததே 1992-ம் ஆண்டு தான். இந்தக் கணக்கை தொடங்க சுதாகரன் செலுத்திய பணமே வெறும் ரூ. 105 தான். நல்லா படிங்க 105 ரூபா தான்.

    இவர் தான் ஜெயலலிதாவால் தத்து எடுக்கப்பட்டு, வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணம் நடத்தப்பட்டது.

    இந்த நிலைமையில் இருந்தவர்கள் தான் அடுத்த 5 வருடத்தில் தமிழகம் முழுவதும் 306 சொத்துக்களுக்கு அதிபதி ஆகி உள்ளனர். அதன் விவரம் இங்கே 

    இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு ரூ. 2,847 கோடி என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சரி, இந்தப் பணம் எப்படித்தான் வந்திருக்க வேண்டும்?
    ரோடு காண்ட்ராக்ட், தொழிற்சாலைக்கு அனுமதி, அரசு ஊழியர் டிரான்ஸ்பர், அரசு பஸ்களுக்கு டயர் வாங்குவதில் கமிஷன், பத்திரப் பதிவுத்துறையில் இருந்து தினமும் இவ்வளவு வர வேண்டும் என துறைவாரியாக பல வகைககளிலும் லஞ்சம் வசூலிக்க முடியும். அரசின் சார்பில் கக்கூஸ் கட்டுவதில் இருந்து செத்தவரை எரிக்கும் மின்சார மயானம் வரை எல்லா வகைகளிலும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்க பல பல வழிகள் கையாளப்படுகின்றன.

    (உதாரணத்துக்கு ரோடு காண்ட்ராக்டில் எப்போதுமே 35 சதவீதம் கமிஷனாகவே போய்விடும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும். ரூ. 10 கோடி மதிப்பில் போட வேண்டிய சாலைக்கு ரூ. 3.5 கோடியை அமைச்சருக்கும் கவுன்சிலர்களுக்கும் ஊராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கும் கிளார்க், பியூன்களுக்கும் லோக்கல் கட்சிக்காரர்களுக்கும் லஞ்சமாக தந்துவிட்ட காண்ட்ராக்டர் மிச்சமிருக்கும் ரூ. 6.5 கோடியில் தான் ரோடே போடுவார். இவர்களுக்கு தேனை அள்ளித் தந்துவிட்டு காண்ட்ராக்டர் புறங் கையையா நக்க முடியும்?. அவர் ரோடு போட வேண்டிய பொருள்களின் தரத்தில் கையை வைப்பார். இதனால் தான் ரோடு போட்டுவிட்டு ரோடு ரோலர் போகும்போதே அதன் சக்கரத்திலேயே பாதி ரோடும் சேர்ந்து ஒட்டிக் கொண்டு போய்விடுகிறது)

    துறைவாரியாக அமைச்சர்கள் தினந்தோறும் இவ்வளவு தர வேண்டும், வாரம் இவ்வளவு தர வேண்டும், மாதம் இவ்வளவு தர வேண்டும், இத்தனை கோடி திட்ட ஒப்புதலுக்கு இவ்வளவு பர்சன்ட் கமிஷன் வாங்கித் தர வேண்டும் என டார்கெட் வைத்தோ மற்றும் நேரடியாகவோ தான் இந்தப் பணத்தை இவர்கள் வசூலித்திருக்க வேண்டும்.

    லஞ்சத்தை செக்கிலோ, டிடியாகவோ வாங்க முடியாதே. இதனால் பெரும்பாலும் பணமாகவோ, நகைகளாகவோ, அசையும்- அசையா சொத்துக்களாகவோ வந்திருக்க வேண்டும்.
    பணமாக வந்ததை வெள்ளையாக்க வேண்டுமே.. அதற்காகவே 
    உருவாக்கப்பட்டன டுபாக்கூர் நிறுவனங்கள். அவை இதோ...

    i. M/s.J. Farm Houses;

    ii. M/s.J.S. Housing Development;

    iii. M/s.Jay Real Estate;

    iv. M/s.Jaya Contractors and Builders;

    v. M/s.J.S. Leasing and Maintenance;

    vi. M/s.Green Farm Houses;

    vii. M/s.Metal King;

    viii. M/s.Super Duper TV (P) Ltd.,

    ix. M/s.Anjaneya Printers Pvt. Ltd.,

    x. M/s.Ramraj Agro Mills Ltd.,

    xi. M/s.Signora Business Enterprises Pvt., Ltd.,

    xii. M/s.Lex Property Development Pvt., Ltd.,

    xiii. M/s.Riverway Agro Products Pvt., Ltd.

    xiv. M/s.Meadow Agro Farms Pvt., Ltd.,

    xv. M/s.Indo Doha Chemicals & Pharmaceuticals Ltd.,

    xvi. M/s.A.P. Advertising Services;

    xvii. M/s.Vigneswara Builders;

    xviii. M/s.Lakshmi Constructions;

    xix. M/s.Gopal Promoters;

    xx. M/s.Sakthi Constructions;

    xxi. M/s.Namasivaya Housing Development;

    xxii. M/s.Ayyappa Property Developments;

    xxiii. M/s.Sea Enclave;

    xxiv. M/s.Navasakthi Contractors and Builders;

    xxv. M/s.Oceanic Constructions;

    xxvi. M/s.Green Garden Apartments;

    xxvii. M/s.Marble Marvels;

    xxviii. Vinod Video Vision;

    xxix. Fax Universal;

    xxx. Fresh Mushrooms;

    xxxi. M/s.Super Duper TV.,

    and xxxii. M/s.Kodanadu Tea Estate;

    இந்த நிறுவனங்களில் எந்த பிஸினசும் நடக்கவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். இவை எதையும் தயாரிக்கவும் இல்லை, விற்கவும் இல்லை. ஆனால், பணம் மட்டும் இந்த நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு வந்து குவிந்து கொண்டே இருந்தது.
    இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்திச் செய்யவில்லை. பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று சசிகலா, இளவரசியின் ஆடிட்டர் பாலாஜி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    அதாவது இவை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்கள். லஞ்சமாக வந்த பணத்தை வங்கிகளில் போடவும், அதை வெள்ளையாக மாற்றி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளுக்கு மாற்றவும் மட்டும் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

    இவ்வாறு ஜெயலலிதாவும் சசிகலாவும் மொத்தம் 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

    அதே நேரத்தில் இந்த நிறுவனங்களுக்காக போலி பேலன்ஸ் ஷீட், லாப - நட்டக் கணக்கு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் நிரூபணமாகியுள்ளது.
    லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்தை போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர் ஜெயராமன் என்பவர் மூலமாக சசிகலா மூட்டைகளிலோ அல்லது பைகளிலோ கொடுத்து, கூடவே பூர்த்தி செய்யப்பட்ட சலானையும் கொடுப்பார். அதை இந்த டிரைவர் எடுத்துச் சென்று சசிகலா சொன்ன வங்கியிலு, சொல்லும் கணக்கில் போட்டுவிட்டு வருவார். இதை ஜெயராமனே சாட்சியாக அளித்துள்ளார்.

    நம்மைப் போன்றவர்கள் வங்கிக்குப் போய் வீட்டுக்கு ஒரு பத்தாயிரம் அனுப்ப முயன்றால் பேன் கார்டு கொண்டு வா, ஈ கார்டு கொண்டு வா என்று வங்கிகளில் ரூல்ஸ் பேசி திருப்பி அனுப்புவார்கள். ஆனால், ஒரு டிரைவர் மூட்டையிலும் பையிலும் கொண்டு வந்த லட்சக்கணக்கான பணத்தை, கேள்வியே கேட்காமல் வாங்கி கணக்கில் போட்ட வங்கி அதிகாரிகளை என்னவென்று சொல்வது.. அதாவது அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் பணம் இது என்பதால் கப்சிப் என வாங்கி வரவு வைத்துள்ளனர்.

    இவ்வாறு இந்த நிறுவனங்களுக்கு வந்த பணம் பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.


    Posted by விழியே பேசு... at 4:31 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.