கனடா நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கியுடன் நாடாளுமன்றத்தில் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்-துள்ளனர்.
இதை தவிர ஒட்டாவாவிலுள்ள போர் நினைவுச் சின்னம் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு கனடா நாட்டுக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீவிரவாதிகள் நுழைந்த சில நொடிகளில் கனடா பிரதமர் ஹார்ப்பர் பத்திரமாக வெளியேறினார்.
No comments:
Post a Comment