இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை வாங்க மறுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை போட்டியின் லைட்வெயிட் பிரிவில் நடுவர்களின் செயல்பாட்டால், இந்திய வீராங்கனை சரிதா தேவி தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடைபெற்ற பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணிய சரிதா மறுப்பு தெரிவித்தார்.
பின்னர் கண்ணீர் விட்டு அழுதபடியே பதக்கத்தை கண்ணீருடன் பெற்றுக்கொண்டார். பதக்கத்தை வாங்க மறுத்ததால் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment