விருதுநகர்
மாவட்ட விளையாட்டு அலுவலக சுற்றறிக்கையில் வரிக்கு
வரி பிழையுடன் அச்சிட்டு தமிழை கொச்சைப்படுத்தி உள்ளனர்.விருதுநகர் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில்
மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டிகளை அக்.,9ல் நடத்தினர். இதற்கான
சுற்றறிக்கை நகல்கள் மாவட்டத்தில் அனைத்து
சிறப்பு பள்ளிகள், மாவட்ட மறுவாழ்வு அலுவலர்,
விளையாட்டு ஆணைய மண்டல முதுநிலை
மேலாளருக்கு அனுப்பி உள்ளனர்.
இதில் வரிக்கு வரி பிழைகள்
உள்ளன. அதன் விபரம்: மாவட்ட
விளையாட்டு அலுவலர் பெயர் ம.
ராமசுப்பிரமணியராஜா- இதை 'ம.ஹிராமசுப்நிரமதிய
ராஜா' என்றும்; விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
அலுவலர் என்பதை 'ஜீளையாட்டு மற்றும்
ஹிளைஞா நலன் அலுவலர்' எனவும்;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்பதை 'தலீழ்நாடு
ஜீளையாட்டு மேம்பாட்டு ஆணையம்' எனவும்; விருதுநகர்
என்பதை 'ஜீருதுநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியர், ஆசிரியை என்பதற்கு பதிலாக
'தலைமை ஆஞிளீயர், ஆஞிளீயை' என குறிப்பிடப்பட்டு உள்ளது.மாற்றுத்திறனாளிகள் என்பதை 'மாற்றுத்ணிறனாஹீகளுக்கான' எனவும்; வியாழன்
என்பதை 'ஜீயாழன்' எனவும் பிழையாக அச்சிட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை அலுவலகத்தினருக்கு தாய்மொழி மீது என்ன கோபமோ?
No comments:
Post a Comment