விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, October 24, 2014

    வளர்ப்பு மகன் திருமணம் பற்றி ஜெயலலிதா சொன்ன பொய்கள்

    வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றி ஜெயலலிதா, பெங்களூர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான பொய்களை கூறியதாக நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறார் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை சசிகலா வுக்கு ஜெயலலிதா பவர் கொடுத்துவிட்டார். அதனால், நிறுவனத்தில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்ற வாதத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் முன்வைத்தார். இதை ஏற்க முடியாது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு ‘பவர் ஆப் அட்டர்னி‘ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷன்ஸில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள். தன் ஏஜென்டாக சசிகலாவை நியமித்து உள்ளார். நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் ஜெயலலிதாவின் ஒப்பு தலுக்குப் பிறகே நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு கொடுத்துள்ளது.

    தன் வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்கவே முடியாது. வாக்கா ளர் பட்டியலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 36, போயஸ் கார்டன் முகவரிதான் இருக்கிறது. சசிகலாவும் இளவரசியும் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தமோ அல்லது வேறு வகையில் சொந்தமோ இல்லாதபோது அவர்கள் ஏன் தன்னுடன் வசிக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவால் தெளிவுபடுத்த முடியவில்லை. சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஏனென்றால், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ணீ1 கோடி கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு ஜெயலலிதா தன் பெயரில் ஷ்யூரிட்டி செக் கொடுத்துள்ளார்.



    வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத்  திருமணம். சுதாகரனுக்கும் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வழிப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995ல் திருமணம் நடைபெற்றது. பந்தல்கள் அமைப்பதற்கு ணீ5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532, உணவு, தண்ணீர், தாம்பூலம் கொடுத்த செலவு ணீ1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125. ணீ4 லட்சத்துக்கு வெள்ளித் தட்டுகளும் அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பிய வகை யில் ணீ2 லட்சத்து 24 ஆயிரம் செலவாகியுள்ளது. இந்த வழக்கின் 181ம் சாட்சி தங்கராஜன். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரான இவர்தான், சுதாகரன் திருமணச் செலவுகளை மதிப்பிட்டவர். சுதாகரன் திருமணச் செலவாக இவர்கள் கணக்கிட்ட தொகை ணீ5 கோடியே 91 லட்சம். வழக்கின் சாட்சிகளை எதிர்த்து வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சுதாகரனின் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து தயாரிக்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. அதை மதிப்பீடு செய்துள்ள சாட்சிகள் சுதாகரனின் திருமணத்தை நேரில் பார்க்காத வர்கள். அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலைப்பாடுகள், பந்தல்கள் பற்றி இவர்களுக்கு என்ன புரிதல் இருக்க முடியும் என்று வாதிட்டார். வழக்குச் சாட்சியாகப் பொதுப்பணி துறை மூத்தப் பொறியாளர் முத்துச்சாமி விசாரிக்கப்பட்டார். அவரது சாட்சிப்படி, பந்தல்கள் அமைப்பதற்கு விஜயசங்கர் வரைபடம் தயாரித்துக் கொடுத்துள்ளார். எம்.ஆர்.சி நகரில், 5 முக்கிய பந்தல்கள் போடப்பட்டு உள்ளன. தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல்கள் 60‘ ஙீ  450‘  என்ற அளவில் 8 அமைக்கப்பட்டு உள்ளன.

    வி.ஐ.பிகளுக்கான உணவுப் பந்தலை 60‘ ஙீ   200‘ என்ற அளவில் மன்னார்குடி ராஜகோபால் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். சமையலறை பந்தல்கள் 45‘  ஙீ   1,356‘  என்ற அளவில் குமரேசன் நாடார் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமண மேடை, ஏ.சிகள், ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை எத்திராஜ் அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்கான செலவுகளை ஜெயலலிதாவின் குடும்பம் ஏற்றுக் கொண்டதாக கூறி உள்ளார். தண்ணீர் வசதிக்காக 5 போர் வெல்கள் அமைக்கப்பட்டன. லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை நடந்துள் ளது. சி.எஸ்.சந்திரசேகரன் என்பவர் மின் இணைப்பு கொடுத்துள் ளார். இதற்காக 210 கிலோ வாட்  ஜெனரேட்டர்களையும் 4 மொபைல் ஜெனரேட்டர்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, ஜெயலலிதாவும் சசிகலாவும் மேற்பார்வையிட்டனர் என்றும் முத்துச்சாமி சாட்சியம் அளித்துள்ளார்.மணமகளின் தந்தை நாராயணசாமி இவர்களுக்குக் கொடுத்த தொகை போக மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார். பால்பாபு என்ற வட இந்திய அலங்கார நிபுணருக்கு போயஸ் கார்டனில் இருந்து, ணீ1 லட்சத்து 50 ஆயிரம் செக் கொடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி நகர் வரையிலான பாதையை செப்பனிட்டு 2 பக்கமும் விளக்குகளால் அலங்காரம் செய்த சுப்பிரமணி மற்றும் சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார்.

     பந்தல் தொடங்கி, சுதாகரன் திருமணத்தில் நடை பெற்ற அனைத்து வேலை களையும் மேற்பார்வை பார்த்த பொதுப் பணித் துறை மூத்த பொறியா ளர் முத்துச்சாமியிடம் விசாரித்துத்தான் பொறியா ளர் தங்கராஜ், பந்தலுக்கான செலவு மற்றும் இதர விஷ யங்களை மதிப்பிட்டுள் ளார். அதுவும், திருமணம் நடந்த 1995ம் ஆண்டில் அந்தப் பொருள்கள் சந்தையில் என்ன விலைக்கு விற்றதோ அந்த விலையிலேயே மதிப்பிட்டுள்ளார்.சுதாகரனின் திருமணம் பற்றி ஜெயலலிதா நேரில் ஆஜராகி சாட்சி சொன்ன போது, அந்தத் திருமணத்துக்காக, தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும், வருமான வரித்துறைக்கு அளித்த பதிலிலும் அதனைத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறினார். ஆனால் ஜெயலலிதா 1996&97ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் திருமணச் செலவுகள் என்று குறிப்பிட்டு ணீ25 லட்சத்து 98 ஆயிரத்து 521 என்றும்

    ரொக்கமாக ணீ3 லட்சத்து 94 ஆயிரத்து 240 செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, சுதாகரனின் திருமணத்துக்கு ஆன செலவுகளாக அவர்கள் வருமான வரித்துறையினருக்குத் தாக்கல் செய்த கணக்கில் தெளிவாக ணீ12 லட்சத்து 50 பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களுக்குச் செலவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். திருமணத்துக்கான எல்லா செலவுகளையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால், பந்தல், விளக்கு அலங்காரம், கார்கள், அழைப்பிதழ் செலவுகளுக்கு ஜெயலலிதா கையெழுத்து போட்டு செக் கொடுத்தது ஏன் என்ற இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் நீதிபதி குன்ஹா தெரிவித்திருக்கிறார். 

    பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தனி நீதிபதியின் தீர்ப்பு இன்னும் விரிவானது. அந்த தீர்ப்பு பற்றி முதலில் நான் தெரிவித்தவாறு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை தான். ஆனால் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்த எதுவும் தனக்குத் தெரியாது என்றும், தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்றும், சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், சுதாகரன் திருமணத்திற்காக தான் எதுவும் செலவழிக்கவில்லை என்றும் ஜெயலலிதா சொன்ன அடுக்கடுக்கான பொய் களை ஆதாரத்தோடு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். அவைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதைத் தவிர யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என்னுடைய நோக்கமல்ல.

    இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
    Posted by விழியே பேசு... at 8:08 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.