கோவையில் உள்ள
முன்னணி மால்களில் நாளை முத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள
வருமாறும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இது குறித்து கருத்து
தெரிவித்துள்ள கோவை இந்து முன்னணி, இந்து கலாச்சார கூட்டமைப்பினர், இது போன்ற போராட்டங்கள்
கலாச்சார சீரழிவை ஏற்படுத்த கூடியவை. இது போன்ற போராட்டங்கள் நடந்தால் அதனை எதிர்ந்து
இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் பெற்றோர்கள்
யாரும் தங்கள் பிள்ளைகளை நாளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் இந்து முன்னணியினர்
கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் .....
No comments:
Post a Comment