நடிகர்
சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் எதிரெதிர்
துருவங்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர்
அர்னால்டு தெரிவித்தார்.
இதுபற்றி
புதுடெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ்
லீடர்ஷிப் மாநாட்டில் அவர் பேசியதாவது:-
1980-களில்
எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள்
இருவரும் ஒரே துறையில் இருந்தோம்.
எங்களில் ஒருவரை விட மற்றொருவர்
எப்படி சிறப்பாக வெளிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினோம். அந்த
நேரத்தில் எங்களுக்குள் எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. பாடி
பில்டிங் முதல் படத்தில் எதிரிகளை
கொன்று குவிப்பது, யார் படம் அதிக
வசூலாகிறது என்பது வரை அனைத்திலும்
கடும் போட்டி இருந்தது.
ஆனால்,
பத்தாண்டு கடும் போட்டிக்கு பிறகு
90-களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எந்த ஒரு
விஷயத்திலும் முதலில் உங்களை வெறுக்கும்
ஒரு போட்டியாளர் தேவை. அதுதான் என்னை
இந்த அளவு வளர்ச்சிக்கு கொண்டு
வந்துள்ளது.
இப்போது
நாங்கள் பக்குவமாக இருக்கிறோம். சில்வர்ஸ்டாரும் நானும் இணைந்து பல
படங்களில் நடிக்கிறோம். நான் செய்யும் ஒவ்வொன்றையும்
சிறப்பாக செய்யவே எப்போதும் விரும்புகிறேன்.
என் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை தழுவியிருக்கிறேன்.
ஆனால், ஒவ்வொருமுறை நீங்கள் தோல்வி அடையும்போதும்
மீண்டும் எழுந்து இலட்சியத்தை நோக்கி
சென்று கொண்டே இருக்க வேண்டும்.
அதுதான் உங்களை வெற்றியாளர் ஆக்கும்.
இவ்வாறு
அவர் பேசினார்.
தி எக்ஸ்பேண்டபில்ஸ், எஸ்கேப் உள்ளிட்ட திரைப்படங்களில்
நடிகர் அர்னால்டு, சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் இருவரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் .....
No comments:
Post a Comment