இப்படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார்? என்று பரவலாக கேள்வி எழுந்து வந்தது.
முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. தற்போது, விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா அல்லது தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சோனாக்ஷி சின்ஹாவும், தீபிகா படுகோனேவும் ஏற்கெனவே நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுகோனே ‘கோச்சடையான்’ படத்திலும், சோனாக்ஷி சின்ஹா ‘லிங்கா’ படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment