“முதல் படத்தில் நின்ற இடத்தில்தான் ஆயிரமாவது படத்திலும் நிற்கிறேன். நான், எப்போதும் நானாகத்தான் இருப்பேன்” என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
‘ஷமிதாப்’ படவிழா
அமிதாப்பச்சன்-தனுஷ் இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தை பால்கி டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியிடும் நிகழ்ச்சி, மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக நடந்தது.
‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக இசை துறையில் சாதனை புரிந்து வருகிறார். 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பத்மபூஷன் விருது என பல பெருமைகளை பெற்ற அவர், இதுவரை 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அவருடைய 1001-வது படமாக, ‘ஷமிதாப்’ அமைந்து இருக்கிறது. இதையொட்டி இந்தி பட உலகம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி, கவுரவித்தது.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் விழாவில் கலந்து கொண்டார்கள். இருவரின் முன்னிலையில், விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை அமிதாப்பச்சன் முன்நின்று நடத்தியதுடன், ‘ஷமிதாப்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை மேடையில் பாடினார். இளையராஜாவிடம் அவர் பாட கற்றுக்கொண்ட அனுபவங்களை மேடையில் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பேசும் போது, இளையராஜாவுடனான பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
ஐஸ்வர்யாராய்
விழாவில் ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், ஸ்ரீதேவி, போனிகபூர், சரிகா, சுருதிஹாசன், அக்ஷரா, இசையமைப்பாளர் பப்பிலகரி, பின்னணி பாடகர் உதித்நாராயண், பின்னணி பாடகி ஸ்ரேயாகோஷல், டைரக்டர் பாலா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பால்கி செய்து இருந்தார்.
இளையராஜா இசையில் உருவான ‘‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது,’’ ‘‘யாரடிச்சாரோ’’ ஆகிய 2 பாடல்களை, தனுஷ் மேடையில் பாடினார்.
பேட்டி
மும்பையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று பகல் இளையராஜா விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது:-
நான் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தாலும் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. மும்பையில் இந்தி பட விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் அமிதாப்பச்சன் அழைத்தார். நான் அங்கு சென்றபோதுதான் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருப்பதை அறிந்து அமிதாப் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து இருப்பது எனக்கு தெரிந்தது. அந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
நான், நானாக இருப்பேன்
அப்போது நிருபர்கள், “நீங்கள் இசை அமைத்த முதல் படத்திற்கும், ஆயிரமாவது படத்திற்கும் உங்கள் பயணம் எப்படி?” என கேட்டனர். அதற்கு அவர், “நான் பயணம் செய்வது கிடையாது. முதல் படத்தில் எங்கு நின்றேனோ, அதே இடத்தில்தான் ஆயிரமாவது படத்திலும் நிற்கிறேன். எனது இசை தேவைப்படுபவர்கள்தான் வந்து பெற்று கொண்டு செல்கின்றனர்” என்றார்.
“இந்தி பட உலகில் காலை 11 மணிக்குதான் பணியை தொடங்குவார்கள். ஆனால் நீங்கள் காலை 8 மணிக்கே பணியை தொடங்கி விடுவீர்கள். இந்தி பட உலகில் நீங்கள் எப்படி இருந்தீர்கள்?” என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர், “நான் எப்போதும் நானாகத்தான் இருப்பேன். மாறமாட்டேன்” என்றார்.
மேலும் அவரிடம், “ஆயிரமாவது படத்தில் எதாவது மாற்றம் செய்து உள்ளீர்களா?” என கேட்டபோது, “படம் வெளி வரட்டும் தெரியும்” என பதில் அளித்தார்.
பின்னர் விமான நிலையத்தில் ரசிகர்கள் தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு இளையராஜா காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
‘ஷமிதாப்’ படவிழா
அமிதாப்பச்சன்-தனுஷ் இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தை பால்கி டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியிடும் நிகழ்ச்சி, மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக நடந்தது.
‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக இசை துறையில் சாதனை புரிந்து வருகிறார். 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பத்மபூஷன் விருது என பல பெருமைகளை பெற்ற அவர், இதுவரை 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அவருடைய 1001-வது படமாக, ‘ஷமிதாப்’ அமைந்து இருக்கிறது. இதையொட்டி இந்தி பட உலகம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி, கவுரவித்தது.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் விழாவில் கலந்து கொண்டார்கள். இருவரின் முன்னிலையில், விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை அமிதாப்பச்சன் முன்நின்று நடத்தியதுடன், ‘ஷமிதாப்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை மேடையில் பாடினார். இளையராஜாவிடம் அவர் பாட கற்றுக்கொண்ட அனுபவங்களை மேடையில் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பேசும் போது, இளையராஜாவுடனான பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
ஐஸ்வர்யாராய்
விழாவில் ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், ஸ்ரீதேவி, போனிகபூர், சரிகா, சுருதிஹாசன், அக்ஷரா, இசையமைப்பாளர் பப்பிலகரி, பின்னணி பாடகர் உதித்நாராயண், பின்னணி பாடகி ஸ்ரேயாகோஷல், டைரக்டர் பாலா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பால்கி செய்து இருந்தார்.
இளையராஜா இசையில் உருவான ‘‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது,’’ ‘‘யாரடிச்சாரோ’’ ஆகிய 2 பாடல்களை, தனுஷ் மேடையில் பாடினார்.
பேட்டி
மும்பையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று பகல் இளையராஜா விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது:-
நான் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தாலும் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. மும்பையில் இந்தி பட விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் அமிதாப்பச்சன் அழைத்தார். நான் அங்கு சென்றபோதுதான் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருப்பதை அறிந்து அமிதாப் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து இருப்பது எனக்கு தெரிந்தது. அந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
நான், நானாக இருப்பேன்
அப்போது நிருபர்கள், “நீங்கள் இசை அமைத்த முதல் படத்திற்கும், ஆயிரமாவது படத்திற்கும் உங்கள் பயணம் எப்படி?” என கேட்டனர். அதற்கு அவர், “நான் பயணம் செய்வது கிடையாது. முதல் படத்தில் எங்கு நின்றேனோ, அதே இடத்தில்தான் ஆயிரமாவது படத்திலும் நிற்கிறேன். எனது இசை தேவைப்படுபவர்கள்தான் வந்து பெற்று கொண்டு செல்கின்றனர்” என்றார்.
“இந்தி பட உலகில் காலை 11 மணிக்குதான் பணியை தொடங்குவார்கள். ஆனால் நீங்கள் காலை 8 மணிக்கே பணியை தொடங்கி விடுவீர்கள். இந்தி பட உலகில் நீங்கள் எப்படி இருந்தீர்கள்?” என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர், “நான் எப்போதும் நானாகத்தான் இருப்பேன். மாறமாட்டேன்” என்றார்.
மேலும் அவரிடம், “ஆயிரமாவது படத்தில் எதாவது மாற்றம் செய்து உள்ளீர்களா?” என கேட்டபோது, “படம் வெளி வரட்டும் தெரியும்” என பதில் அளித்தார்.
பின்னர் விமான நிலையத்தில் ரசிகர்கள் தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு இளையராஜா காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment