விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, December 3, 2010

    இசைப்ரியா அன்றும், இன்றும், என்றும்... சேனல்4 இன் வீடியோ


    வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.

    இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 நேற்று வெளியிட்டது. பார்ப்பவர்களை கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர்.

    வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வை பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது,ராணுவம் [^] நடத்திய அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்தவண்ணம் உள்ளது.

    இந்த காட்சிகள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து [^] நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.

    இந்த கோரங்கள் அனைத்துக்கும் முக்கிய காரணமான இலங்கை அதிபர் [^] ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள நிலையில், அதே நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4, புதிய வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பியது. 

    இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட ரவிப்பிரியா என்ற சிங்கள பெண் ராணுவ அதிகாரியின் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

    இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த சிங்கள ராணுவத்தினர் தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியினர் அத்தனை பேரையும் கற்பழித்துக் கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிகிறது.

    இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே, "இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இசைப் பிரியா சிதைக்கப்பட்டதாகவும்" செய்தியைப் பரப்பியது ராணுவம். போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க இந்த உத்தியைக் கையாண்டுள்ளனர்.

    ஊடகங்களும் ஏமாந்து போய் இந்தத் தகவலை வெளியிட்டுவிட்டன. ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை. 

    நிராயுதபாணியாக நின்ற செய்தியாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்கவே அவரை பெண்புலியாக சித்தரித்து செய்தி பரப்பியுள்ளனர் சிங்களத் தரப்பில். 

    அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும். 

    "
    சிங்களத்தின் பரப்புரைகளை நம்ப வேண்டாம். செய்தியை ஆய்வு செய்த பிறகே வெளியிடவும். இசைப்பிரியா ஒரு நிராயுதபாணி. அதுமட்டுமல்ல, அவர் ஒரு இசைக் கலைஞர், செய்தியாளர், படங்களில் நடித்தவர்... இத்தகைய ஒருவரை ராணுவத்தினர் வெறியுடன் கற்பழித்து கொன்றுள்ளனர்.. இது மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை தமிழர் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இசைப்ரியா அன்று


    இசைப்ரியா இன்று



    தயவு செய்து இந்த பதிவுக்கு ஓட்டு போடாதீர்கள் ...
    தமிழனாக உங்கள் குமுறலை வேண்டுமானால் பின்னூட்டமாக போடுங்கள் 
    இந்த இசைப்ரியாவின் போட்டோவை தான் சிறிது காலத்திற்கு முன் இலங்கை ராணுவமும் அரசும் மீடியாக்களுக்கு இது தான் பிரபாகரனின் மகள் எங்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் என்று காட்டியது. மீடியாக்களும் அதை அவசரம் அவசரமாக வெளியிட்டு இருந்தது. ஆனால் விடுதலைபுலிகள் இது தலைவனின் மகள் அல்ல, எங்கள் இயக்கத்தின் பாடகி இசைப்ரியா என்று மறுப்பு வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அந்த மறுப்பை பலரும் நம்பவில்லை. ஆனால் அது இப்போது நிஜமாகி உள்ளது. இப்போது தமிழ் தலைவனின் மகள் உயிருடன் தான் உள்ளார். என்பதும் இதன் மூலம் உண்மையாகிறது. இதை போன்று தான் இறந்து போன அல்லது இவர்களால் (தலைவனின் சாயலை ஒத்த ஆளாக தேர்ந்தெடுத்து) கொல்லப்பட்ட ஒருவரைத்தான் இது நாள் வரை பிரபாகரனின் உடல் என்று சொல்லி உலகை நம்பவைத்து கொண்டு இருக்கிறார்கள், என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி நிறைய பேசணும் போல இருக்கு ஆனால் இப்பொது வேண்டாம் இன்னொரு நாள் பேசுகிறேன். 
    இப்போது நான் கேட்பது எல்லாம் ஒரு ஊடகவியலாளர் பாதிக்க பட்டால் பொங்கி எழும் ஊடகங்கள் இப்போது என்ன செய்ய போகிறது. தமிழ் பெண்ணாக பிறந்ததால் மௌனம் காக்க போகிறார்களா? 'நான் முதலில் உங்களை போல் ஒரு பத்தீக்கையாளன் தான். அதனால் உங்கள் கஷ்டங்களில், துயரங்களில் நானும் பங்கெடுப்பேன் " என்று கூறும் தமிழக முதல்வர் தமிழின் ஈனத்தலைவர் ( எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டது தமிழ் இனத்தலைவராமே) என்ன சொல்ல போகிறார்?
    தமிழனாய் ஒவ்வொரு வலை பதிவாளர்களும் இதனை கண்டித்து ஒரு வரியேனும் உங்கள் வலைத்தளத்தில் எழுதுங்க. நாமேனும் கடமையை செய்வோம். ...
    எங்கள் இசைப்ரியா என்றும் எங்கள் மனதில் வீற்றிருப்பாள் .....தமிழன் உண்மையான தீபாவளியைகொண்டாடும் காலம் விரைவில் வரும் ....
    மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து இந்த பதிவுக்கு ஓட்டு போட்டு இசைபிரியாவின் தியாகத்தை கெடுத்து விடாதீர்கள் . 
    தமிழனாக உங்கள் குமுறலை வேண்டுமானால் பின்னூட்டமாக போடுங்கள்
    Posted by விழியே பேசு... at 10:33 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    14 comments:

    1. Dr.RudhranDecember 4, 2010 at 6:17 AM

      தமிழ்நாட்டு அரசியல் மீது இன்னும் எதற்கு நம்பிக்கை..கழுத்தறுபட்டது போதாதா

      ReplyDelete
      Replies
        Reply
    2. மாணவன்December 4, 2010 at 8:42 AM

      //அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும்.//


      மனது வலிக்கிறது நண்பா,

      வேறொன்றும் சொல்வதற்கில்லை...

      ReplyDelete
      Replies
        Reply
    3. Blogspot ChennaiDecember 6, 2010 at 5:56 PM

      இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்
      மனிதம் மாண்டதுக்கான சாட்சி

      www.nttv24x7.com

      ReplyDelete
      Replies
        Reply
    4. விழியே பேசு...December 6, 2010 at 7:47 PM

      @Dr.Rudhran
      தமிழ்நாட்டு அரசியல் என்று இல்லை. உலக அரசியலையும், அரசியல் தலைவர்களின் சுயநல பேச்சுக்களையும் நம்பியதால் தான் இத்தனை உயிர் இழப்புகளும், இந்த நிலைமையும் என்பதே எனது கருத்து.

      ReplyDelete
      Replies
        Reply
    5. விழியே பேசு...December 6, 2010 at 7:55 PM

      @மாணவன்
      இலங்கை ராணுவத்தோடு கூட்டணி அமைத்து இத்தகைய படுபாதக செயலை செய்த உலக நாடுகள் அனைத்தும் மனசாட்சி என்று ஒன்று உண்டு என்றால் தமிழர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதோடு, இலங்கை தமிழருக்கு சொந்தமான பூமியை அவர்களுக்கு மீட்டு தர முன்வர வேண்டும். அப்போது தான் இந்த கொடுமைகளால் நமக்கு ஏற்பட்ட வலிக்கு ஆறுதலாக இருக்கும்.

      ReplyDelete
      Replies
        Reply
    6. விழியே பேசு...December 6, 2010 at 8:00 PM

      @Blogspot Chennai
      அது மட்டுமல்ல இந்திய தமிழனின் சுயரூபத்தை உலகுக்கு காட்டியதும் இலங்கையில் நடந்த கொடூரங்களே! தமிழனுக்கு என்று ஒரு நாடு, அதற்கு என்று ஒரு அதிபர் இல்லாதவரை தமிழனின் குரல் உலக நாடுகளின் செவிகளில் ஓங்கி ஒழிக்க வாய்ப்பே இல்லை

      ReplyDelete
      Replies
        Reply
    7. NADESANDecember 13, 2010 at 2:55 PM

      சிங்கள நாய்களுக்கு அழிவு ஆரம்பம்

      நெல்லை பெ. நடேசன்
      அமீரகம்

      ReplyDelete
      Replies
        Reply
    8. UnknownDecember 14, 2010 at 2:07 PM

      சீங்கள வெறீநாய்கள்

      ReplyDelete
      Replies
        Reply
    9. Chandru..........December 14, 2010 at 4:34 PM

      நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மானிடரை நினைக்கையிலே ....நடந்த கொடுமையை நமது நண்பர்களிடம் சொல்லுவோம் ,நல்லோரிடம் சொல்லுவோம் ....திரும்ப திரும்ப சொல்லுவோம் ....தணலாறாமல் ....மறந்துவிடாமல் இருக்க செய்வோம் ....காத்திருப்போம் ,காலம் ஒருநாள் மாறும் ...நாம் கவலைகள்யாவும் தீரும்.....


      "துயிலா இரவுகளில்
      அப்பா என்று அலறித் துடிக்கின்ற
      சின்ன மழலைக்கு
      என்னதான் சொல்வாய்
      உலவித் திரியும் நிலவைக் காட்டி
      மார்பில் தாங்கி
      அப்பா கடவுளிடம் போனார்
      என்று சொல்லாதே
      துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
      குருதி படிந்த கதையைச் சொல்
      கொடுமைகள் அழியப் போரிடச் சொல்.....'
      (ஈழக் கவிதை-இரவல் )

      ReplyDelete
      Replies
        Reply
    10. UnknownDecember 16, 2010 at 5:03 PM

      கொடுமையிலும் கொடுமை. இதை செய்தவர்கள் விழைவுகளை அனுபவிக்கும் நாள் தொலைவில் இல்லை.

      ReplyDelete
      Replies
        Reply
    11. விழியே பேசு...December 21, 2010 at 12:52 AM

      This comment has been removed by the author.

      ReplyDelete
      Replies
        Reply
    12. விழியே பேசு...December 21, 2010 at 12:54 AM

      @Chandru..........
      நண்பரே உங்கள் கருத்துக்கள் மிக்க அருமை, இரத்தத்தை சூடாக்குகிற அளவுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக நீங்கள் எடுத்து கொண்ட பாடல் வரிகள் பிடிக்க வில்லை("நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மானிடரை நினைக்கையிலே .") வேறு யாராவது எழுதிய பாடல் வரிகளை எடுத்து காட்டி இருக்கலாம், ஏன் ஒரு சிங்கள கவிஞரின் பாடல் வரிகளை கூட குறிப்பிட்டு இருக்கலாம். ஆம், அந்த பாடலை எழுதியவர் யார் நண்பரே தமிழின துரோகி, நயவஞ்சக குள்ள நரி , சுயநல சூத்திரகாரரின் பாடலை அல்லவா எடுத்து காட்டி இருகிறீர்கள். எப்படி நாம் சிங்களன் செய்த கொடுமைகளை மறக்க கூடாதோ அதை போன்று தான் இந்த துரோகிகள் செய்தவைகளையும் மறக்க கூடாது. ஏன் தெரியுமா நண்பரே பழி வாங்குவதற்கு அல்ல, நமக்கு பின் வருபவர்களும் இவர்களை நம்பி ஏமாந்து விட கூடாது என்பதற்காக...!

      ReplyDelete
      Replies
        Reply
    13. விழியே பேசு...December 21, 2010 at 12:56 AM

      This comment has been removed by the author.

      ReplyDelete
      Replies
        Reply
    14. இவள் பாரதிMarch 1, 2011 at 9:59 AM

      மனிதம் என்பது மருந்துக்கும் இல்லாத மண்ணில் நமது பேச்சுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்குதானோ?

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.