விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, April 10, 2011

    பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம்: பிரதமர்


    எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். தமிழகம் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சிபெற தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.


    கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை பீளமேடு கொடிசியா மைதானம் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார்.


    பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:


    நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்ட மறைந்த ராஜாஜி, நேருவோடு இணைந்து செயல்பட்டதை நாம் மறக்க முடியாது. இதேபோல இந்திரா காந்தியோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காமராஜர் மற்றும் ராஜீவ்காந்தியின் தீவிர ஆதரவாளரான மூப்பனார் ஆகியோரின் செயல்பாடுகளை நாம் மறக்க முடியாது.


    தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடு இணைந்து செயல்படும் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


    தமிழக அரசு கொடுத்த ஒத்துழைப்பினால் டெல்லியில் எனது தலைமையிலான அரசாங்கம் நிறைய பலன்களை பெற்றது. தமிழக தலைவர்களின் முயற்சியினால் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதில் காங்கிரஸ் கட்சி பெருமைகொள்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் கரத்தையும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கரத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு கேட்டு உங்கள் முன்பு நான் நிற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து பணியாற்றி தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளன. இதற்கு காரணமான தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை நான் பாராட்டுகிறேன். கருணாநிதியின் சீரிய தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு மாதிரி மாநிலமாக விளங்குகிறது.


    நமது அரசாங்கம் பெண்களின் அந்தஸ்தை உயர்த்த உறுதி பூண்டு இருக்கிறது. நாம் இப்போது பஞ்சாயத்து ராஜில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து இருக்கிறோம். அதைப்போலவே நாடாளுமன்றத்திலும் அந்த இடஒதுக்கீட்டை அளிப்பதில் உறுதிபூண்டு இருக்கிறோம். பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு ஆய்ந்து, இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் முதல்நிலையில் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு என்று அறிவித்து இருப்பதை நான் படித்தேன்.


    நீங்கள் உங்களுடைய வாக்குகளை ஆராய்ந்துதான் சீர்தூக்கித்தான் அளிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அதில் எனக்கு சந்தேகமே கிடையாது. ஏன் என்றால் தமிழ்நாட்டு மக்களின் அறிவில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் சொல்கிறேன், எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளால் நீங்கள் தடம்மாற மாட்டீர்கள் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். எனவே நான் உங்களை மீண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து நாம் ஒன்றுபட்டு உழைத்து தமிழ்நாட்டினுடைய வருங்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்று உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.


    மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்து இருக்கிற சாதனைகள் எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய வாக்குகளை சாதனையின் அடிப்படையில், நீங்கள் அளிக்க வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


    இங்கு நம்முடைய முக்கியமான சிறப்பு திட்டங்களால், தமிழ்நாடு மிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே போன்று நம்முடைய திட்டங்களால், 2008 ல் உலக பொருளாதார நெருக்கடி வந்தபோது கூட, 8 சதவீத வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தொட்டு இருக்கிறோம் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


    பாரத் நிர்மாணத்தின் மூலம் கிராமபுற வளர்ச்சியினை அதனுடைய உள்கட்டமைப்பினை, கிராமபுற சாலைகளை, கிராமபுறத்திற்கு இருக்கின்ற மின்வசதிகளை, அங்கிருக்கிற நீர்பாசன வசதிசளை எல்லாம் நாம் செய்துகொடுக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு அளிப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திற்கும் 100 நாட்கள் கண்டிப்பாக வேலை என்று சொல்கிற உறுதிமொழியை செயல்படுத்தி வருகிறோம். அதே போன்று ஒவ்வொரு குழந்தைகள் அவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் கல்வி உரிமையை அளித்து, அவர்களுக்கு அறிவு வளர்ச்சியை நாம் உறுதி செய்கிறோம்.


    அதே போல் தேசிய உடல்நல மையத்தின் மூலம் இந்த நாட்டில் இருக்கிற மக்கள் ஒவ்வொருவருடைய உடல்நலத்தை பேணுகிறோம். அதே போல் நம் விவசாய உற்பத்தியை பெருக்குவதோடு, அவர்களுக்கு கட்டுபடியான விலையை கொடுப்பதற்கும், நாம் வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் எல்லோருக்கும் உணவு என்பதனை உறுதி அளிக்கிறோம்.


    அதுமட்டுமல்லாமல் நம்முடைய அரசாங்கம், வெளிப்படையாக, ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெறுகிறது. அப்படி நடைபெற வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமை சட்டத்தை, நாம் நிறைவேற்றி உள்ளோம்.


    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் சட்டரீதியாக சில தடைகள் ஏற்பட்டு உள்ளன. அந்த தடைகளையெல்லாம் நீக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்.


    காங்கிரசும், அதனுடைய கூட்டணி கட்சிகளும், சாதாரண பொதுமக்களின் தேவைகள் என்ன என்பதனையும், எல்லா இனத்து மக்களின் உணர்வுகளையும் தெரிந்து வைத்து இருக்கிற கட்சிகளாகும்.




    காங்கிரஸ் தலைமையில் இருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சமுதாய ரீதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிற மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், மலைவாழ் மக்களையும், பின் தங்கியவர்களையும், சிறுபான்மையினரையும், பெண்களையும், குழந்தைகளையும் கவனித்து அவர்களுக்கு ஆவன செய்கிறது. சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு அவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, 90 மாவட்டங்களை எடுத்து, அவர்களுக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.

    இப்போது தமிழகத்து மக்களை போல் சமூக நீதியை புரிந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது, காங்கிரசுக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும், நிச்சயமாக அவர்கள், எல்லோருக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பதற்கு, நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.



    Posted by விழியே பேசு... at 10:38 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.