காதல் ஜோடிகளாக வலம் வந்த சினேகா-பிரசன்னா ஜோடி இப்போது தம்பதி ஜோடியாகியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வந்த இந்த தம்பதிகள் பிறகு கலந்துகொண்ட நிகழ்ச்சி நடிகர் யுவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி.
இயக்குநர் சரண், வினயை ஹீரோவாக வைத்து இயக்கிய 'மோதி விளையாடு' படத்தில் கலாபவன் மணியின் மகனாக நடித்தவர் தான் இந்த யுவா. இவருக்கும் சென்னையைச் சார்ந்த பாரதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதியன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர்கள் ரிச்சர்ட், சிபிராஜ், பிரேம்ஜி, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைநட்சத்திரங்கள் கலந்துகொள்ள, அந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது சினேகா-பிரசன்னா தம்பதி ஜோடி தான். அதுமட்டும் இன்றி சினேகாவின் மொத்த குடும்பமும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக்கியது

No comments:
Post a Comment