ஆப்கானிஸ்தான் குறித்தான நேட்டோ நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரையில் பாகிஸ்தான் அதிபரின் பெயர் இடம் பெறவில்லை. அதற்கு மாற்றாக மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளை வரவேற்று பேசினார்.
மேலும் அவர் தன் உரையில் மத்திய ஆசிய மற்றும் ரஷ்ய நாடுகள் நேட்டோ படைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுவதாக பாராட்டினார். ஒபாமா உரையின் போது சர்தாரி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்வுடன் வட்ட மேசையில் அமர்ந்திருந்தார்.
நவம்பர் 26 ம் தேதி நடைபெற்ற எல்லை தாண்டிய துப்பாக்கிசூட்டில் 24 பாகிஸ்தான் வீரர்கள் நேட்டோ படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தன் நாட்டின் வழியாக நேட்டோ படைகளுக்கு பொருட்கள் அனுப்புவதற்கு தடை விதித்தது.
இத்தடையை நீக்க இயலாத சர்தாரியுடன் ஒபாமா பேச்சு வார்த்தை நடத்த வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment