2 வருடமாக தனது
படம் வராதது ஏமாற்றமாக இருக்கிறது என்றார் சிம்பு.தனுஷுடன் மோதல், நயன்தாராவுடன் காதல்
சர்ச்சை, ஹன்சிகாவுடனான காதல் தோல்வி என மாதத்துக்கு ஒரு பிரச்னை என சந்தித்த சிம்பு,
அப்பிரச்னைகளிலிருந்து மீண்டிருக்கிறார். தனுஷுடன் கைகோர்த்து நண்பராகி இருக்கிறார்.
நயன்தாராவுடன் மீண்டும் ‘இது நம்ம ஆளு' படத்தில் ஜோடிபோட்டு நடித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைத்தார். ஹன்சிகாவின் காதல் முறிவையும் தாங்கிக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ‘போடா போடி' வெளியானது. 2 வருட இடைவெளியில்,
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தார்.
‘இது நம்ம ஆளு‘ ‘வாலு‘, ‘வேட்டை மன்னன்‘ என 3 படங்கள் அவர்
நடிப்பில் திரைக்கு வரவேண்டி உள்ளது. 2 ஆண்டாக படம் வராதது குறித்து அவரது ரசிகர்கள்
இணைய தள டுவிட்டர் பக்கத்தில் சிம்புவிடம் கேட்ட வண்ணம் உள்ளனர்.
இதுபற்றி சிம்பு கூறும்போது,‘
வாலு படம் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் கேட்கின்றனர். அவர்களின் ஆர்வம் கண்கலங்க
வைத்திருக்கு. வாலு படத்தின் டப்பிங் பணி இரவு பகலாக நடக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல
என்னை நானே திரையில் பார்த்து 2 வருடம் ஆகிவிட்டது. வரும் டிசம்பர் 24ல் வாலு படத்தை
ரசிகர்கள் பார்க்கலாம்' என்றார்.
No comments:
Post a Comment