‘ஹேக்கர்ஸ்’, ‘கேர்ள், இன்டருப்டட்’, ‘அலெக்ஸாண்டர்’, ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ்
ஸ்மித்’
உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஏஞ்சலினா ஜோலி. 2011&ம் வருடம்
‘இன் த லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி’ என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கினார்.
இப்போது, ‘அன்புரோக்கன்’ என்ற படத்தை தயாரித்து
இயக்கியுள்ளார். ‘பை த சீ’ என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கி, நடித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஜோலி, இப்போது நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:நடிகையாக நான் மகிழ்ச்சிகரமாக இல்லை.
கேமராவுக்கு முன்னால்
நிற்பதை நான் விரும்பியதில்லை. இருந்தாலும் நடித்தேன். படம் இயக்குவேன் என்றும் எப்போதும்
நினைத்ததில்லை. ஆனால் இயக்கினேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குனராக தொடர்வதற்காக
நடிப்பை விட்டுவிட முடிவு செய்துள்ளேன். ‘பை த சீ’ படத்தில் என் கணவர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளேன்.
வித்தியாசமான முயற்சி அது.
மேலும் .....
No comments:
Post a Comment