பெங்களூரை
சேரந்த கரண் வாசுதேவன் எழுதி
இயக்கி இசை அமைத்து ஒளிப்பதிவு
செய்து தயாரித்துள்ள குறும்படம் “மரணத்தின் ஜகடம்”. செல்வ விஜயன்
நாயகனாக நடித்துள்ள இக்குறும்பட விளியீட்டு விழா AVM திரையரங்கில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டார் இயக்குநர்
அமீர். குறும்பட விழா மேடையை அரசியல்
மேடையாக்கும் விதமாக அங்கு ஒரு
தகவல் பேசப்பட, அதற்கு பதிலளிக்கும் விதமாக
அரசியலோடு பேச ஆரம்பித்தார் அமீர்.
“இந்த நேரத்தில் மத்திய
அரசிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்திருப்பதாக
தொரிகிறது. அதாவது திருவள்ளுவர், பாரதியார்
இருவரின் நூல்களையும் இந்திய அளவில் பாடத்திட்டத்தில்
சேர்க்கப்போவதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால்
இதை அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன்.
இத்தனை
நாளும் வள்ளுவரையும் பாரதியாரையும் மோடி அரசாங்கத்திற்கு தெரிய
வில்லையா? இப்போது தான் தெரிகிறதா?
இது அடுத்து வரப்போகிற சட்டசபை
தேர்தலை மனதில் வைத்து காய்
நகர்த்தும் செயல். சமஸ்கிருதத்தை இங்கு
திணிப்பதற்கு முயலும் மோடி அரசு
அதற்கு ஈடாக திருக்குறள், பாரதியார்
பாடல்களை இந்திய அளவிற்கு எடுத்து
செல்வதாக பம்மாத்து செய்கிறது. இதை ஒருபோதும் தமிழ்
மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
தமிழர்
கரண் வாசுதேவன் உறுவாக்கி இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை
பார்த்தேன். குறும்படம் எடுக்க வரும்போது எல்லோரும்
கவனமாக இருக்க வேண்டும். மற்ற
குறும்படங்களை பார்த்து அவர்களுக்கும் நமக்கும் கதை சொல்வதில் எப்படிப்பட்ட
வித்தியாசத்தை காட்டியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள
வேண்டும். ஒரு குறும்படத்தை எடுத்துவிட்டு
இங்கேயே தேங்கி விடக்கூடாது. அடுத்த
கட்டத்திற்குப் போக வேண்டும்” என்று
அறிவுரையோடு முடித்தார்.
No comments:
Post a Comment