ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனும், அல் ஜவாஹிரியும் பிரிந்து விட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது...
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனை விட்டு ஜவாஹிரி பிரிந்து போய் விட்டார். மேலும் பின்லேடனை, ஜவாஹிரி ஓரம் கட்டி வைத்து விட்டார். மேலும் பின்லேடன் இயக்கத்திற்கு நிதி வருகையும் வெகுவாக குறைந்து போனதால், பின்லேடனை அவர் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.
1988ம் ஆண்டு அல் கொய்தா அமைப்பை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி. மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல் கொய்தாவின் தாக்குதல்களை நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக இல்லை. இதுகுறித்து அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது நம்பும்படியாகவே இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்ததாக எங்களிடம் உளவுத் தகவல் எதுவும் இல்லை.
பின்லேடனுக்கு பல கடுமையான பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் ஜவாஹிரியும், அவரும் பிரிந்திருந்ததாக எங்களிடம் தகவல் இல்லை. அல் கொய்தா அமைப்புக்குப் பண வருகை வெகுவாக நின்று போனது உண்மைதான் என்றார்.
இருப்பினும் 2005ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போதுதான் ஜவாஹிரிக்கும், பின்லேனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த ஆண்டில், ஈராக்கில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவரான அபு முசாப் அல் ஜர்காவி என்பனது தலைமையில் ஈராக் அல் கொய்தா உருவானது. இதன் பிறகுதான் பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஜவாஹிரியால் தனக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே அபோத்தாபாத்துக்கு பின்லேன் இடம் பெயர்ந்து வந்ததாகவும் கருதப்படுகிறது.
இன்றைய செய்திகள்....
- என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா...
- விக்ரம் நடிக்கும் வேந்தன்!
- மே 12ல் திரைக்கு வருகிறது அழகர்சாமியின் குதிரை!
- இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
- மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!
- ரசிகர்கள்தான் எல்லாமே...! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!!...
- அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேட...
- நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்ப...
- பின்லேடனைப்போல் ஐநா அறிக்கையும் கடலில் வீசப்பட்டு...
- ரஜினிகாந்த் குணமடைய ரசிகர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்...
- இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை
- கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட நடிகை ஷெபாலி ஷா
- அத்தனை கண்களும் கங்குலியை நோக்கி!
- ஒசாமா பதுங்கியிருந்த வீடு (படங்கள்)
- இதியாவை தாக்க தயாராகிறது : இந்திய எல்லையில் பாகிஸ்...
- காஷ்மீருக்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார்: மத்த...
- 'பின்லேடன் மரணத்தால் ஆப்பிரிக்காவுக்கு அபாயம்'
- கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக த...
- தேர்தல் முடிவு குறித்து கலக்கத்தில் உள்ளன திமுகவும...
- அல்கொய்தா அமைப்புக்கு ஜவாகிரி தலைவர் ஆகிறார்
- எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடியாது-ர...
- 6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து ...
- ஜெயம் ரவி வெப்சைட் : வாரம் ஒரு முறை லைவ் சாட்டிங்
- அன்னா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு
- கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு
- புதிய ஒசாமா பின்லேடன் வீடியோ பதிவை வெளியிட்டது அமெ...

No comments:
Post a Comment